தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 55 - பிந்து வினோத்
55. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விவேக் பாரதியை பார்த்தான்...
சண்டைப் போட போகிறாளா? கோபப்பட போகிறாளா?
கேள்விகள் அவனுள் அலைமோதியது... இது அவன் எதிர்பார்க்காதது அல்ல, ஆனாலும் இந்த நேரத்தில்...
மனதில் கேள்விகள் எழ, “சொல்...” என்றான் அவன்.
பாரதியின் விழிகளில் யோசனை வந்துப் போனது... அவன் சாரி சொல்வான் என்று நினைத்திருப்பாளோ??? விவேக் யோசிக்கும் போதே,
“என்ன விஷயம், ஏன் கொஞ்ச நாளா வித்தியாசமா நடந்துக்குறீங்க?” எனக் கேட்டாள் பாரதி.
அவளின் குரலில் எந்த பெரிய உணர்வும் இல்லை... பொதுவாக கேள்வி கேட்கும் தோரணை மட்டுமே இருந்தது...
உண்மையாகவே விவேக் இதை எதிர்பார்க்கவில்லை!!! கோபமாக கத்துவாள், சோகமாக இருப்பாள் அல்லது சண்டைக் கோழியாக சீறுவாள் என அவன் நினைத்திருக்க, பாரதி பொறுமையாக 'ஏன்', 'என்ன' என்று கேள்விகள் கேட்பது அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது...
ஏற்கனவே அவள் மீது அதிக அன்பு வைத்திருந்தவன், இப்போது இன்னும் அதிகமாக அவள் மீது காதல் வயப்பட்டான்... மனைவியின் அருகே சென்று அவளை அள்ளி அணைத்துக் கொள்ள எழுந்த ஆசையை அடக்க அவன் பெரும் பாடு பட வேண்டி இருந்தது... இது சரி இல்லை, என யோசித்துக் கொண்டே,
“லுக் பாரதி, ஐ ஆம் வெரி டையர்ட்...” என்றான் போலியான அலுப்புடன்!
“புரியுது... எனக்கு ஓரு பத்து நிமிஷம் போதும்... இதை இப்போவே பேசி முடிச்சிடலாமே?”