பாரதியின் குரலில் இருந்த அமைதி விவேக்கின் மனதை மீண்டும் அசைத்தது. ஆனாலும் மனதை அடக்கி,
“உனக்கு இப்போ என்ன தெரியனும்?” என்றான் கடுமையாக!
“ஏன் கொஞ்ச நாளா என்னோட சரியா பேச மாட்டேங்குறீங்க? வித்தியாசமா வேற நடந்துக்குறீங்க... உங்களுக்கு ஏதாவது கோபமா? யாராவது ஏதாவது சொன்னாங்களா? நீங்க என்னன்னு சொன்னால் தானே உங்க மனசுல இருக்குறது எனக்கு தெரியும்?”
“அதை தெரிஞ்சு என்ன செய்யப் போற?”
“இப்படி கேட்டால் எப்படிங்க? என்னன்னு தான் சொல்லுங்களேன்...”
“ஓகே... நீ இவ்வளவு கேட்கும் போது நான் இதுக்கு மேல சொல்லாமல் இருப்பது சரி இல்லை... கொஞ்ச நாளா நான் ஏன் உன் கிட்ட பழைய மாதிரி வழிறதில்லைன்னு தானே கேட்கிற? லாஸ்ட் வீக் என்னுடைய கம்பெனி ரெஜிஸ்டர் ஆகி ஆஃபிஷியல் கம்பெனி ஆகியாச்சு...”
“ஸோ வாட்? நான் என்ன கேட்கிறேன், நீங்க என்ன சொல்றீங்க??”
“உனக்கு இன்னும் புரியலையா? உன்னுடைய பணம் எல்லாம் இன்வெஸ்ட்மென்ட்டா என் கிட்ட வந்து சேர்ந்தாச்சு... கம்பெனி என் பேரில் இருக்கு, இன்வெஸ்ட் செய்த பணமும் என் பேரில் தான் இன்ஃப்ளோ ஆகி இருக்கு...”
“அது எனக்கே தெரியுமே...”
“குட்! இப்போ அது வெறும் என் கம்பெனி, உனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...”
“இருக்கட்டுமே... நான் கேட்டது அதைப் பத்தி இல்லையே?”