எல்லோருமே என் சைட் தான் பேசுவாங்க... நீ அவங்க கிட்ட இந்த உண்மையை சொல்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... நீ சொன்னாலும் அதை எப்படி எனக்கு சாதகமா மாதி டாக்கில் செய்யனும்னு எனக்கு நல்லாவே தெரியும்... திரும்ப திரும்ப நீ அசிங்கப் பட வேண்டாம்ன்னு தான் இப்போவே உன் கிட்ட சொல்றேன்... என்ன இருந்தாலும் யாருமே இல்லாத அனாதையாச்சே நீ! ஓகே, உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டேன்... இப்போ தூங்கப் போறேன்... குட் நைட் பாரதி!”
சொல்லிவிட்டு இலகுவாக விவேக் தூங்க செல்ல, பாரதி என்ன செய்வது என்று புரியாமல் விக்கித்து போய் நின்றிருந்தாள். விவேக் வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்து சொன்ன அநாதை என்னும் வார்த்தை அவளை மிகவும் காயப் படுத்தி இருந்தது...
பாரதி இப்படி ஒரு பூதத்தை விவேக்கிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை... பாலா ஏதாவது சொல்லி கணவனின் மனதை குழப்பி இருக்க கூடும் என்று தான் நினைத்திருந்தாள்... விவேக் திட்டம் போட்டு அவளை ஏமாற்றினானா???
அவளால் நடப்பது எதையும் நம்பவே முடியவில்லை... இனி என்ன செய்வது?
ஒன்றும் புரியாமல் குழப்பத்துடனே நின்றாள் பாரதி!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...