“அப்படின்னு நீ நினைக்குற.... ஆனால் சம்மந்தம் இருக்கே பாரதி,” என்றான் விவேக் ஒரு ஏளன முறுவலோடு!
பாரதி கேள்வியாக பார்க்க, விவேக் தொடர்ந்துப் பேசினான்.
“என்ன புரியலையா? உனக்கு புரியுற மாதிரியே சொல்றேன், கேட்டுக்கோ... நாம மீட் செய்த முதல் நாள் ஞாபகம் இருக்கா உனக்கு? ஆஃப்டர் ஆல் ஒரு லெக்சரர் நீ... அந்த காலேஜ் கட்ட இடத்தை ஃப்ரீயா கொடுத்தது எங்க அப்பா! என் லெவலுக்கு முன்னாடி நீ எவ்வளவு கீழ இருக்க... ஆனாலும் எப்படி எல்லாம் என் கிட்டே திமிரா பேசின... அன்னைக்கே உன்னை அதுக்காக ஃபீல் செய்ய வைக்குறதுன்னு முடிவு செய்தேன்... பார்த்திபன் மூலமா உன் பேரில இருக்க பணம் பத்தி தெரிஞ்சதும், என் மனசை மாத்தி வேற ப்ளான் செய்தேன்... உன்கிட்ட இருக்கும் பணம் என்னுடைய பிஸ்னஸிற்கு தேவை... ஆல்ஸோ நீ ஒரு அனாதை.. என்ன ஏதுன்னு கேட்க கூட உனக்கு யாருமில்லை... ஸோ, உன் திமிருக்கு தண்டனையும் கொடுக்கனும் எனக்கு வேண்டிய இன்வெஸ்ட்மென்ட்டும் கைக்கு வரணும்... ப்ளான் செய்தேன்... நடிச்சேன்... இப்போ எல்லாம் முடிஞ்சுப் போச்சு... இட்ஸ் வெரி சிம்பிள்! மூவி காட் ஓவர் பாரதி... இனிமேல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை... உன் முலமா எனக்கு நடக்க வேண்டிய விஷயம் எல்லாம் முடிஞ்சுப் போச்சு... இதுக்கு மேல நான் ஒரு நல்ல கணவனா நடிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லையே...”
பாரதியை நேராக பார்த்து பேச முடியாமல், ஜன்னல் வழியாக தெரிந்த வானில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களை பார்த்தபடி பேசி முடித்தான் விவேக்!
உடனடியாக பாரதியிடம் இருந்து எந்த சத்தமும் எழவில்லை... அவனால் அவளின் மனநிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது...
ஆனால் அவளுக்காக உருக இது நேரமில்லை... அவன் சொல்ல நினைத்ததை இப்போதே முழுவதுமாக சொல்லி விடுவது தான் சரி என முடிவு செய்து தொடர்ந்துப் பேசினான்...
“லுக் பாரதி, நீ இந்த வீட்டிலேயே இருக்கலாம்... மிசர்ஸ் விவேக் என்ற பேருக்கோ, தி கிரேட்