“உனக்கு இப்போ விஷயம் தெரிஞ்சிடுச்சு... இனி மேல் பிரச்சனை வர வாய்ப்பு இல்லைன்னு நினைக்கிறேன்... திரும்ப காலையில் நடந்த மாதிரி ஏதாவது பேசி நாலு பேர் முன்னாடி அசிங்கப்படாதே. உன் நிலைமை என்ன என்பதை புரிஞ்சு நடந்துக்கோ...”
“என்ன பேசுறீங்க நீங்க? நீங்க புரிஞ்சு தான் பேசுறீங்களா? இப்போ என் வாழ்க்கை மட்டுமா கேள்விக்குறியா இருக்கு? உங்க வாழ்க்கையும் தானே??”
பாரதி பக்கம் திரும்பி அவளை நேராக ஒரு பார்வை பார்த்த விவேக், அவளின் அருகே நெருங்கி வந்து நின்றான்... பாரதியின் கழுத்தில் இருந்த தாலியை தன் விரலால் சுட்டிக் காண்பித்து,
“இது இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும்னு நினைக்குறீயா? உனக்கு உலகம் தெரியலை பாரதி... லைஃப்பை என்ஜாய் செய்ய இந்த லைசென்ஸ் எல்லாம் வேண்டாம்... உன் கிட்ட இருந்து எனக்கு கிடைக்காமல் போக கூடிய விஷயங்கள் எல்லாம் எத்தனையோ இடத்தில இருந்து எனக்கு கிடைக்கும்... இப்போ நான் கூப்பிட்டாலும் பொண்ணுங்க க்யூவில வந்து நிற்பாங்க... நீ என்னை பற்றி எல்லாம் கவலை பட வேண்டாம்... எனக்கு இந்த மேரேஜ், குழந்தை எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் சரியா இருக்காது! வேண்டவும் வேண்டாம்..."
“ச்சீ... என்ன பேசுறீங்க ஆனந்த்? இதை எல்லாம் ஏதாவது வேடிக்கையா சொல்றீங்களா? என்னால நம்பவே முடியலையே?”
“உனக்கு இருந்தாலும் என் மேல ரொம்ப ஓவர் லவ் வந்திருச்சு போல இருக்கே பாரதி! பரவாயில்லை, என்னுடைய ஆக்ட்டிங் கூட நம்புற மாதிரி தான் இருக்கு போல! குட் ஜாப் விவேக்!!!”
பாரதி குழம்பிப் போனவளாக என்ன சொல்வது என்றுப் புரியாமல் கணவனையே வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.
“இங்கே பார், இந்த வீட்டில இருக்க அண்ணி ஸ்டார்ட் செஞ்சு உன் ஃப்ரென்ட் வரைக்கும்