”எல்லாமே உன் நல்லதுக்குதான்“
”என்னடா சொல்ற”
”பின்ன அவளால நீ எந்தளவுக்கு கஷ்டப்பட்டிருப்ப இனி உனக்கு ஒரு கஷ்டமும் வராது இந்த விசயத்தால அவளோட வேலை பறிபோயிடும், அடுத்து என்னைதான் பிரின்சிபாலா ஆக்குவாங்க நீ கவலையேப்படாத, என்னால காலேஜ்க்கோ உனக்கோ எந்த பிரச்சனையும் வராது, கேள்வித்தாள் கிடைக்காட்டி என்ன பரிட்சை அன்னிக்கு கேள்விதாள்ல இருக்கற பதிலை எழுத புக்கையே மாணவர்கள்கிட்ட கொடுத்துடலாம், இல்லையா போர்டுல பதிலை எழுதிடலாம், எது எப்படியோ மாணவர்கள் பாஸானா போதும், இந்த முறை பாரு காலேஜ்க்கு நல்ல பேர் கிடைக்கும்”
“முட்டாள் முட்டாள் நண்பனாடா நீ சே, கண்ணகி பாவம் அவளால இந்த காலேஜ்ல எந்த பிரச்சனையும் வரலை அவள் எல்லா பிரச்சனையையும் சரியாக்கதான் நினைச்சா, அவளைப் போய் மாட்ட வைச்சிட்டியே இல்லை நான் போய் அவளை காப்பாத்தறேன்”
”வேணாம் நண்பா, இப்ப மட்டும் இந்த விசயத்தில நீ நுழைஞ்ச அப்புறம் உன்னையும் கைது செய்வாங்க, ரிஸ்க் எடுக்காத கண்டுக்காம இரு, அவள் மேலயே பழி பாவம் விழட்டும்” என சொல்லியும் கோவலன் மனம் இரங்கவில்லை.
அவசரமாக கிளம்பிச் சென்றான்.
கண்ணகி கைதான விசயம் கேள்விப்பட்டு ஈஸ்வரமூர்த்தியால் நம்ப இயலவில்லை உதயமூர்த்தியோ அவர் முன் பதட்டமாக நின்றார்
”இதெப்படின்னு தெரியலை ஈஸ்வரா எங்கயோ தப்பு நடந்திருக்கு”
”ஆனா பழி கண்ணகி மேல விழுந்திருக்கே”
”கண்டிப்பா கண்ணகி இந்த தப்பை செய்திருக்க மாட்டா அவள் நல்லவ யாரோ செய்த தப்பு