மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 42 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“என்ன இப்படி பார்க்குறீங்க?” சாந்ததுரை தவறாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போலவே கேட்டான்!
“சக்தி உங்களோட சின்ன வயசு போட்டோ வச்சு பெரியவரா ஆன அப்புறம் நீங்க எப்படி இருப்பீங்கன்னு அவ கம்ப்யூட்டர்ல க்ரியேட் செய்திருந்தா. ஹைட் மட்டும் ஓகே, மஸ்குலர் பில்ட், சிக்ஸ் பேக் ஹுஹும்!!!! சாரி, நீங்க ஃபெயில்! அட்டர் ஃப்ளாப் போங்க,” என்றாள் சத்யா!
சாந்ததுரை யோசித்தான்!
“இதுக்காக எல்லாம் மனசு வெறுத்து போயிடக் கூடாது டாக்டர்!!”
“என்னை கிண்டல் செய்யாம இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க சிஸ்டர். என் போட்டோ மாதிரி வேற யார் போட்டோவையாவது வச்சு சக்தி இப்படி பார்த்தாங்களா?”
“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்லை. உங்க கவிதை புக் கிடைக்கவே ஒரு ஆர்வத்துல செய்தா!”
“அது தான்! நான் ரொம்ப ஸ்பெஷல்!”
“அதை நாங்க யாரவது சொல்லனும்! நீங்களாவே சொல்லிக்க கூடாது!!!”
“நீங்க மனசுக்குள்ளே நினைச்சீங்க, நான் சத்தமா சொல்லிட்டேன்! ஆனாலும் சத்யா சிஸ்டர் நீங்க பெரிய உதவி செய்திருக்கீங்க. எங்க முதல் குழந்தை பையனா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் பேரு சத்யா தான்! பை!” சாந்ததுரை போனப்பிறகும் சத்யா அங்கே சில வினாடிகள் நின்றிருந்தாள். குழந்தை??? எதற்கும் நாலு புது பாட்டில் டிங்சர் வாங்கி வைப்பது என்று முடிவு செய்துக் கொண்டாள்!!
🌼🌸❀✿🌷
சத்யா வீட்டிற்கு வந்து சேர்ந்தப் போது, ஷாலினி அஹல்யாவிடம் நோட்புக்கை காட்டி பேசிக்