தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
39. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அர்ச்சனா சொன்ன புது விபரங்களை, இந்து முழுவதுமாக சொல்லி முடிக்கும் வரைக்கும், கீதாவும் வீணாவும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவள் பேசி முடித்தப் பிறகும் கேள்விப்பட்ட விஷயத்தின் தாக்கத்தினால் இருவருமே உடனே எதுவும் சொல்லவில்லை...
இந்துவிற்கு இது என்ன மாதிரியான அதிர்ச்சியாக இருக்கும் என்பதை உணர்ந்து, அவளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் அவர்கள் தடுமாறினார்கள்!
ஒரு சில வினாடிகள் அப்படியே செல்ல, "என்னால நம்பவே முடியலை..." என்றாள் கீதா!
வீணா அப்போதும் அமைதியாகவே இருந்தாள்! கீதாவே தொடர்ந்துப் பேசினாள்!
"அங்கிளுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும்னு நம்பவே முடியலை... சரவணன் அங்கிள், அர்ச்சனா ஆன்ட்டி மாதிரி ஒரு க்யூட் கப்பிலை நான் பார்த்ததே கிடையாது... ப்ச்... ஹ்ம்ம்... நந்தினிக்கு ஏன் அவ்வளவு கோபம்னும் இப்போ புரியுது..."
கீதா சொன்னதை ஆமோதிப்பதாக தலை அசைத்த வீணா,
"அர்ச்சனா ஆன்ட்டி மட்டும் இல்லாம, என்னோட அத்தையும் ஏன் நந்தினி கிட்ட சண்டைக்குப் போகாம, அட்ஜஸ்ட் செஞ்சுட்டுப் போக சொன்னாங்கன்னு இப்போ தான் தெரியுது," என்றாள்!
இந்து எதுவும் சொல்லாமல் மெளனமாக தன் முன் இருந்த பழரசத்தை ஸ்ட்ராவினால் கலக்கி கொண்டிருந்தாள்! வீணாவும், கீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள்... மேலே ஒன்றும் பேசாமல், அமைதியாக, அவர்கள் இருவரும் கூட தங்களின் ஜூஸைப் பருகினார்கள்! சில நிமிடங்கள் அப்படி அமைதியில் செல்ல, பின் இந்துவே பேசினாள்.
"ஒரு பக்கம் பார்க்க போனா, அப்பா இறந்தப் பிறகு இதெல்லாம் எனக்கு தெரிஞ்சது நல்லதுன்னு தான் தோணுது... அவர் இருக்கும் போதே இது தெரிஞ்சிருந்தா, நான் அவர் கிட்ட எப்படி நடந்திருப்பேன்னு தெரியலை... ஆனால், கட்டாயம் அவரை மன்னிச்சிருக்க மாட்டேன்... என்ன தான் யார் கம்பல் செய்தாலும், மாதவி ஆன்ட்டியோட ஹஸ்பன்டா இருந்துட்டே அம்மாவை அவர் கல்யாணம் செஞ்சது சரி கிடையாது... தப்பு... அவரால ஆன்ட்டியோட