தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 60 - பிந்து வினோத்
60. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“லாவண்யா தான் என்னை முதன் முதல் இம்பாக்ட் செய்தவள்...”
“எனக்கு இந்த கதையில் எல்லாம் ஆர்வம் வர காரணமே லாவண்யா தான்...”
தவறாக யோசிக்குறோமோ என்று பாரதியின் மனதில் நப்பாசையுடன் எழுந்த கேள்வியை, விவேக் முன்பு சொன்ன வாக்கியங்கள் அடக்கியது!
ஒருவேளை அன்று விவேக்கை வேண்டாம் என்று சொன்ன லாவண்யா, இன்று மனதை மாற்றிக் கொண்டாளா?
தான் யோசிப்பது சரியா என்றும் புரியாமல், மனதில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையும் தெரியாமல், மொத்தமாக குழம்பினாள் பாரதி! என்ன செய்வது என்று புரியாமல் ஒரு சில வினாடிகள் இருந்தவள், அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல், மீண்டும் பவித்ராவின் நம்பரை செல்ஃபோனில் தட்டினாள்.
இந்த முறையும் பதில் இல்லாமல் போகவே, ரமேஷின் நம்பரை அழைத்தாள். ஒன்றிரண்டு ரிங்குகளிலேயே ஃபோனை எடுத்துப் பேசிய ரமேஷ்,
“சாரி பாரதி, இன்னைக்கு வர முடியலை... முக்கியமான வேலை இருக்கும்மா,” என்றான்!
“என்ன அண்ணா நீங்க! பவித்ராவையாவது அனுப்பி இருக்கலாம் தானே? அவளுக்கு என்ன ஆச்சு? ஃபோன் செய்தால் எடுக்கவே இல்லை...”
“உன் ஃப்ரெண்டை பத்தி நான் சொல்லி தானா உனக்கு தெரியனும்? அவ வரதா இருந்தா தனியாவே வர மாட்டாளா?”
பாரதி ரமேஷின் பதிலை ஆராய்பவளைப் போல யோசித்தாள்... அதற்குள் ரமேஷே,
“மேடம் உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க பாரதி,” என்றான்!