“பவிக்கு கோபமா? என் மேலேயா?”
“ஆமாம்... உன்னுடைய கோ-சிஸ்டர் அவக் கிட்ட ஏதோ சொன்னாங்க போல... அதை எல்லாம் நீ அவக் கிட்ட சொல்லலையாம்...”
“எதைப் பத்தி?”
“நான் ஒன்னு சொல்லவா பாரதி? நீ பவித்ரா கிட்ட நேரா பேசு... அதான் கரக்ட்...”
“ம்ம்ம்...”
“சாரி பாரதி, கொஞ்சம் வேலை இருக்கு...”
“என்ன அண்ணா இதுக்கு எல்லாம் சாரி சொல்றீங்க? நீங்க வேலையைப் பாருங்க...”
பாரதி இணைப்பை துண்டித்து விட்டு, தூரத்தில் வந்த வெளிச்சத்தினால் அரை குறை இருட்டாக இருந்த சுற்றுப்புறத்தை வெறித்துப் பார்த்தாள்!
இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்வேன் என்ற கணவனுக்கும் அவள் தேவை இல்லை... அன்று வரை அவளுக்காக என்று இருந்த ஒரே தோழிக்கும் இப்போது அவளை பிடிக்கவில்லை... மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி அழ அவளின் அம்மாவும் உயிருடன் இல்லை...
என்ன தான் செய்வது?
என்ன செய்வது என்று புரியாமல் சிலையாக அமர்ந்திருந்தாள் பாரதி!
அன்று வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமாக வீடு திரும்பினான் ரமேஷ். பவித்ராவாக