”இதை கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே, நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டேனே”
”சொல்லலாம்னுதான் இருந்தேன் எனக்குன்னு இருக்கற ஒரே உறவு தாத்தா அவரையும் என்னால இழக்க முடியாது, அதனால சொல்லலை”
”என் அப்பா அம்மா இறப்புக்கு காரணம் நீங்கன்னு தெரிஞ்சதும் உங்களோட சண்டை போடறதா இல்லை அறியாத வயசுல தெரியாம செய்த தப்புக்காக உங்களை மன்னிக்கறதான்னே தெரியலை”
”நீ என்கூட சண்டை போடவும் வேணாம் என்னை மன்னிக்கவும் வேணாம் என்னை விட்டா போதும்”
என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்ல முயல அவளோ தடுத்தாள்
”எங்க போறீங்க”
”என் காதலிக்கிட்ட” என சொல்ல அவளுக்கு பேரடியாக இறங்கியது தலையில்
”காதலியா“
”ஆமாம் நான் ஒருத்தியை காதலிச்சேன், அவள்தான் என் வாழ்க்கைன்னு முடிவு எடுத்தப்ப உன்கூட எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, தாத்தாவுக்காக மட்டுமே நான் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேன், நான் செஞ்ச தப்புக்கான பரிகாரமாதான் இந்த கல்யாணத்தை பார்க்கிறேனே தவிர இதுக்கு நான் முக்கியத்துவம் தரலை, அதே போல உன்னையும் நான் மனைவியா ஏத்துக்க மாட்டேன்” என சொல்ல அவளுக்கு கோபமே எழுந்தது
”நீங்க செய்றது மோசம்”
”நான் இல்லை தாத்தாதான் ப்ளாக்மெயில் பண்ணாரு, உன்னோட கோபத்தை நீ அவர்கிட்ட