"இது பெட்டர் சரோ! இன்னைக்கு ஈவ்னிங்கே அவரை பார்க்க போவோமா???"
விக்கிராந்த் ஆர்வத்துடன் கேட்கவும், ஜான்வியும், சரவணனும் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு, பின் சிரித்தார்கள்!
🌼🌸❀✿🌷
“சொல்லுங்க சார், உங்களுக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்?”
கண்ணாடியை சரி செய்தபடி கேட்ட புரோக்கர் பரமசிவத்தை பார்த்து பதில் சொன்னான் விக்ராந்த்.
“படிச்சிருக்கனும், அழகா இருக்கனும், கேரக்டர் நல்லதா இருக்கனும், நான் வீட்டில் ஒரே பையன், மூத்தவனும் கூட, ஸோ கொஞ்சம் பொறுப்பானவளா இருக்கனும்... அம்மா அப்பா என் தங்கை எல்லோரிடமும் நல்ல படியா பழகுபவளா இருக்கனும்...”
தெளிவான அவனின் பேச்சை கேட்டு பரமசிவமும், அருகில் இருந்த சரவணனும் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.
“பரவாயில்லையே, நல்லா தெளிவா இருக்கீங்க! இப்போ எல்லாம் பொதுவா பொண்ணு அழகா இருக்கனும், கை நிறைய சம்பாதிக்கணும்ன்னு தான் எல்லோரும் கேட்குறாங்க... சரிங்க சார் நீங்க கேட்ட மாதிரி நல்ல பொண்ணா கண்டுபிடிச்சிடுவோம்...”
பரமசிவம் தன் முன் இருந்த கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் விக்கிராந்திற்கு ஏற்ற பெண்ணை தேட தொடங்கினார்!
🌼🌸❀✿🌷
சனிக்கிழமை காலை பத்து மணி அளவில் பரமசிவம் கொடுத்திருந்த அட்ரஸில் இருந்த அந்த வீட்டை தேடி கண்டுப்பிடித்து வந்து சேர்ந்தார்கள் விக்ராந்தும் சரவணனும்...! பரமசிவம்