ஜான்வி விக்கிராந்தின் லஞ்ச் பாக்ஸை தன் கையில் எடுத்துக் கொள்ள, சரவணன் அவளைப் பார்த்து முறைத்தான்! விக்கிராந்த் அது எதைப் பற்றியும் கவலைப் படாமல் புலம்பினான்!
"ரொம்ப அநியாயமா இருக்கு! அவங்க மட்டும் எல்லா கேள்வியும் கேட்பாங்களாம்... நான் ஒன்னும் கேட்க கூடாதாம்... சரி, அது கூட பரவாயில்லை, நான் என்ன அவங்க எல்லோரையுமா கல்யாணம் செய்துக்க போறேன்? பொண்ணை இப்படி வடிவேலு படத்தில் வர மாதிரி மின்னல் வேகத்தில காட்டிட்டு மறைச்சுக்கிட்டா, நான் எப்படிடா பொண்ணை செலக்ட் செய்றது?”
விக்கிராந்தின் நான் ஸ்டாப் புலம்பலைக் கேட்டு ஜான்வி சரவணனை பார்த்து கண் சிமிட்டி புன்னகைக்கவும், சரவணன் விக்கியை சமாதானம் செய்ய முயன்றான்!
"இதுக்கு தான் நண்பா இப்போ எல்லாம் எல்லோரும் ஆன்லைன்ல இன்ஸ்டா, ஃபேஸ்புக்ன்னு பார்த்து, பேசி, கனக்ட் ஆகிக்குறாங்க! நீ வீட்டுக்கு போய் ஃபேமிலி எல்லோரும் இருக்கும் போது பொண்ணைப் பார்த்தா, இப்படி தாண்டா நடக்கும்!"
"ப்ச்! எனக்கு அதெல்லாம் செட் ஆகாது சரோ!"
“சரி, சரி, ஒரே ஒரு பெண் பார்க்கும் படலம் தானேடா முடிஞ்சிருக்கு, அதுக்குள்ளே நீ இப்படி அலுத்துக்கிட்டா எப்படிடா? நீ டென்ஷன் ஆகாதே! பொதுவா பொண்ணு வீட்டுல கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா தான்டா இருப்பாங்க. நீ ஃபாரின் எல்லாம் போய் வந்ததால எல்லோரும் அப்படியே ரொம்ப ப்ரோக்ரஸ்ஸிவா தின்க் செய்யனும்னு எதிர்பார்த்தால் எப்படி?”
“ஆமாம் விக்கி, காலம் கெட்டு போய் இருக்கு... இது போல ப்ரோட்டக்ட்டிவா இருக்குறபதை தப்புன்னு சொல்ல முடியாது...”
சரவணனும், ஜான்வியும் சொல்வதில் இருக்கும் உண்மை உரைத்ததால் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டான் விக்ராந்த்.
தொடர்ந்து பேச்சு வேறு பக்கம் செல்ல, விக்கிராந்த் மனதுக்குள் அன்று சில வினாடிகள்