மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 50 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி சத்யா வீட்டுக்கு வெளியே ஜீப்பை நிறுத்தி ஹாரன் அடித்தாள். நான்கைந்து முறை தொடர்ந்து சத்தம் எழுப்பினாள். பக்கத்து வீடுகளில் இருந்து தலை தெரிந்தது. இங்கே சத்யாவையும் காணோம், அஹல்யாவையும் காணோம். ஜீப்பை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினாள். கேட் பூட்டி இருந்தது!
சத்யாவும் அஹல்யாவும் இப்போது தான் அந்த வீட்டிற்கு போயிருக்கிறார்களோ? சக்தி மொபைலில் சத்யா நம்பரை டையல் செய்தாள். ஸ்விட்ச்ட் ஆஃப் என்ற மெசேஜ் வந்தது. சந்தேகம் வர திரும்பவும் டையல் செய்தாள். அதே ஸ்விட்ச்ட் ஆஃப் செய்தி திரும்பவும் ஒலித்தது.
என்னமோ சரி இல்லை என்பது சக்திக்குப் புரிந்தது. வேகமாக ஜீப்பில் ஏறினாள். ஜீப்பை ஒட்டியப் படி வேலையில் இருந்தப் போது செய்வதுப் போல பேக்-அப் ரெடி செய்ய முடிவு செய்தாள். 100க்கு டையல் செய்வதை விட தென்றல்வாணனுக்கு நேரடியாக டையல் செய்தால் நல்லது என்று தோன்றியது. தேன் நம்பரை தன் மொபைலில் டையல் செய்தாள். இங்கேயும் ஸ்விட்ச்ட் ஆப் என்ற செய்தி வந்தது. என்ன எல்லோரும் ஃபோனை ஆப் செய்து வைத்திருக்கிறார்கள் என்ற எரிச்சலுடன் அபினவ் நம்பரை டையல் செய்தாள்.
“சக்தி மேடம்?” அபினவின் குரல் மரியாதை கலந்து கேட்டது. அவனுக்கு பின்னே புரியாத சத்தம் கேட்டது.
“அபினவ் எங்கே இருக்கீங்க? தேன் எங்கே இருக்கார் தெரியுமா?” சக்தி பொறுமை இல்லாமல் கேட்டாள்.
“பந்தோபஸ்த் ட்யூட்டியில இருக்கோம் மேடம். தேன் சார் நான் ஃபோன் பேசுறதை பார்த்தா திட்டுவார். ஏதாவது இம்பார்டன்ட் விஷயமா மேடம்?”
“அபினவ், பேசிட்டு இருக்க நேரம் இல்லை. சத்யாவும் அஹல்யாவும் வீட்டுல இல்லை. அஹல்யா முன்னாடி தங்கி இருந்த வீட்டுக்கு போகணும்னு சொல்லி இருந்தாங்க. இப்போ சத்யா ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப் ஆகி இருக்கு. அஹல்யா நம்பர் என் கிட்ட இல்லை. நான் அங்கே போகப் போறேன். எதுவுமில்லைன்னா அங்கே போயிட்டு உங்களுக்கு அப்டேட்