”உனக்கு நாச்சியா கிடைக்கலை அந்த எரிச்சல்ல கிடந்து தவிக்கிற, விட்டுத்தள்ளு அதான் சின்னய்யா நாச்சியாகிட்ட போறார்ன்னு தெரிஞ்சிடுச்சில்ல, இனி நாச்சியா பக்கம் நாம போகாம இருக்கறதுதான் நமக்கு நல்லது”
”அப்படியெல்லாம் என்னால விடமுடியாது, எனக்கு நாச்சியா வேணும், அவளை நான் அனுபவிக்காம விடமாட்டேன்“
”புத்திக்கெட்டுப் போச்சா உனக்கு, நாச்சியா இப்ப சின்னய்யாவோட ஆசை நாயகி, அவளை அடைய நினைக்கறது உனக்கு நீயே சவக்குழியை தோண்டிக்கறதுக்கு சமம்”
”இல்லை என்னோட திட்டப்படி அவள் மேல பழி போட்டு அவளை ஊருக்கு நேர்ந்துவிடத்தான் போறேன்”
”அதெப்படி செய்வ”
”சின்னய்யாவை மயக்கி வைச்சிருக்காள்ன்னு ஒரு பழியை நாச்சியா மேல போடுவோம், சின்னய்யாவுக்காக மேலவீதியே பொங்கும், பழிக்கு ஆளான நாச்சியாக்கு வேற வழி தெரியாது, அவளை ஊருக்கு நேர்ந்துவிடலாம்”
”இது சரியா வருமா“
”சரியா வரும், இந்த விசயம் தெரிஞ்சாலே போதும் பெரிய ஐயாவே நாச்சியாவுக்கு சரியான தண்டனை தருவாரு, அதை நமக்கு சாதகமா மாத்திக்கலாம்”
”என்னவோ சொல்ற, எனக்கும் அது சரியா வரும்னுதான் தோணுது சரி இப்ப நாம என்ன செய்யலாம்”
”ஆமா போட்டோக்காரன் வீடு 2 தெருதள்ளிதானே இருக்கு“
”ஆமா ஏன் கேட்கற”