”இனி இந்த பக்கம் உன்னைப் பார்த்தேன் தொலைச்சி கட்டிடுவேன் போடா” என சொல்லிவிட்டு செக்யூரிட்டியிடம்
”இவனை உள்ளயே விடாதீங்க விட்டீங்க, உங்களை தொலைச்சி கட்டிடுவேன்” என மிரட்டிவிட்டு கெத்தாக உள்ளே வந்தான்.
அந்த காட்சியைக்கண்ட மாணவர்கள் அரண்டு போனார்கள், ஆசிரியர்களும் சிலம்புவை மலை போல நம்பியிருந்தார்கள், இப்போது சிலம்புவின் இந்த பரிதாபகரமான நிலைமையைக்கண்டு எங்கே தங்களுக்கும் இந்த நிலைமை வந்து அவமானப்பட்டுவிடக்கூடாது என நினைத்து ஒழுங்காக பாடம் எடுக்கச் சென்றார்கள்.
கண்ணகியோ கோவலனிடம்
”அசத்திட்டீங்க”
”பின்ன நான் யாரு”
”என் ஹஸ்பென்ட்”
”ஆஆஆ அது இல்லை, அது இல்லை, நான் வந்து கோவலன் ஈஸ்வரமூர்த்தியோட பேரன்னு சொல்ல வந்தேன்” என சொல்ல அவளோ
”சரி என்னோட நண்பன் போதுமா”
”இது பெட்டர் சரி சரி நிக்காத போ போய் வேலையை பாரு”
”அதுக்கு முன்னாடி மாணவர்களை அசம்பிள் பண்ணி நீங்கதான் பிரின்சிபால்ன்னு சொல்லனும்”
”அந்த வேலையை நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி உடனே ப்யூனுக்கு பல கட்டளைகளை