தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 10 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் கேட்டை திரிந்து வருபவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்!
வர்ஷா எதையோ சொல்ல, அதை கேட்டு புன்னகைத்தப் படியே ராஜமும், ப்ரியாவும் காரின் அருகில் வந்தார்கள்.
“ப்ரியா, இது தான் அங்கிள்... இவன் என் மகன் விக்கிராந்த்...” ராஜம் ப்ரியாவிற்கு அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
கணபதியை பார்த்து மரியாதையுடன் வணக்கம் தெரிவித்த ப்ரியா, விக்கிரந்தை பார்த்து ஒரு சின்ன ரெடிமேட் புன்னகையுடன், “ஹலோ...” என்றாள்.
விக்கிராந்தும் அவளைப் போலவே மரியாதைக்காக, “ஹலோ ப்ரியா...” என்றான்!
“விக்கி, இரண்டு நாள்ல ஹாஸ்பிட்டல் போக வைஜெயந்தி அக்கா இங்கே வராங்களாம்... எப்போதும் பக்கத்தில் இருக்கும் ஷேர்ட் அக்கமொடேஷனில தங்குவாங்களாம்... இப்போ தான் நம்ம ஃப்ளாட் இருக்கே, நாங்களும் இங்கே இருக்கோம்... அக்காவையும் ப்ரியாவையும் நம்மளோடவே வந்து தங்க சொல்றேன், ப்ரியா கேட்க மாட்டேங்குறா...” என்று ராஜம் மகனிடம் சொல்ல,
“உங்களுக்கு எதுக்கு ஆன்ட்டி வீண் சிரமம்... நாங்க எப்போவும் செய்றது தான்...” என்றாள் ப்ரியா!
ராஜம் அவளுக்கு பதில் சொல்லும் முன்,
“எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை ப்ரியா... நீங்க அப்படி எல்லாம் எதுவும் நினைக்க வேண்டாம்... எங்க ஃப்ளாட்டை உங்க வீடு போலவே நினைச்சுக்கோங்க...” என்றான் விக்கிராந்த்.
“இல்லை, நீங்களே ரொம்ப நாள் ஃபாரின்ல இருந்துட்டு இப்போ தான் சென்னை வந்திருக்கீங்கன்னு அத்தை சொன்னாங்க... உங்க ஃபேமிலி கெட் டு கெதர்ல நாங்க ஏன்