நடுவுல...”
“நீங்க ஏன் அப்படி நினைக்குறீங்க? நீங்களும் எங்க சொந்தக் காரங்க தானே? நிறைய பேர் இருந்தா தான் வீடு கலகலப்பா இருக்கும்... ஒரே ஊரில் இருக்கோம் இது போல் சந்திக்காமல் இருந்தால் எப்படி?”
விக்கிராந்த் சொன்னதை கணபதியும் ஆமோதித்தார்!
“ஆமாம்ம்மா, ஷேர்ட் அக்கமொடேஷன்னு எதுக்கு வீணா செலவு செய்யனும்? உன் ஆன்ட்டிக்கும் நீங்க எல்லாம் இருந்தா பேச்சு துணை இருக்கும்...”
“அது வந்து அங்கிள்...” என்றாள் ப்ரியா தயக்கத்துடன்!
ராஜம் அதற்கு மேல் அவளின் மறுப்புகளை கேட்பதாக இல்லை!
“போதும் இந்த வந்து போய் எல்லாம்... நீ இதுக்கு மேல எதுவுமே சொல்ல வேண்டாம் ப்ரியா... நீங்க ரெண்டுப் பேரும் எங்க ஃப்ளாட்க்கு தான் வர்றீங்க, நான் முடிவு செய்தாச்சு... நானே வைஜெயந்தி அக்கா கிட்டேயும் சொல்லிடுறேன்... அவங்க வரது தெரிஞ்சிருந்தா, நாங்க வரும் போதே அவங்களையும் கூடவே அழைச்சிட்டு வந்திருப்போம்...”
“நேத்து தான் அப்பாயின்ட்மென்ட் கன்ஃபார்ம் ஆச்சு ஆன்ட்டி...”
“சரி, எது எப்படியோ, நீயும் செவ்வாய் கிழமை தயாரா இரு... நாங்க வந்து அழைச்சிட்டு போறோம்...”
“இ...”
“ம்ம்ம்...” ராஜம் போலியான கோபத்துடன் பார்க்க, ஒரு சின்ன சிரிப்புடன் விட்டுக் கொடுத்தாள் ப்ரியா.
“சரி ஆன்ட்டி...”