”கிளம்பி எங்க போகப் போற“
”பழைய வாழ்க்கைக்கு திரும்பறேன், அதே வாடகை வீடு, முன்ன வேலை செய்த பள்ளிக்கூடத்திலயே டீச்சர் வேலைக்குப் போறேன்”
”வேணாம் கண்ணகி அப்படி செய்யாத”
”ஏன்”
”நீ இங்கயே இரு“
”இங்கயேவா எந்த உறவு சொல்லிக்கிட்டு இருக்கறது”
“நீ கண்ணகியா இரு, யாரும் உன்னை தப்பா சொல்ல மாட்டாங்க, உறவுக்குள்ள மாட்டிக்காத நீ நீயா இரு”
”சரியா சொன்னீங்க நான் நானா இருக்கதான் இப்ப கிளம்பறேன், கணவன் மனைவிங்கற பந்தத்தில மாட்டி என்னை நான் இழந்துட்டேன், என்னை முதல்ல நான் மீட்கனும், அதுக்கு நான் இங்க இருக்க கூடாது நான் கிளம்பறேன்”
”பொறு பொறு அவசரப்படாத இன்னும் நாம பேசி ஒரு முடிவுக்கு வரலை“
”நான் எப்பவோ முடிவு எடுத்துட்டேன், 6 மாசம் என்ன எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கண்டிப்பா நீங்க என்னை ஏத்துக்க மாட்டீங்க, பின்ன எதுக்காக நான் இங்க இருக்கனும் என்னை மறந்துடுங்க, மாதவி எங்க இருக்காள்ன்னு தேடிப்பிடிங்க, உங்ககிட்டதான் நிறைய பணம் இருக்கே அதை வைச்சி மாதவியை கண்டுபிடிக்கறது ரொம்ப சுலபம்”
”நீ சொல்றது சரிதான், என்கிட்ட இருந்த பணத்தை வைச்சி மாதவி என்னை விட்டு போன 2 நாள்லயே அவள் எங்க இருக்கா என்ன செய்றாள்ன்னு தெரிஞ்சிக்க முடியும், ஆனா நான் அப்படி செய்யலை மாதவி ஒரு காரணமா போயிருக்கா, கண்டிப்பா அவள் என்னை தேடி