தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 69 - பிந்து வினோத்
69. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பவித்ரா கேள்வியுடன் பாரதியைப் பார்த்தாள்!
“என்ன பாரு சொல்ற? லாவண்யாவை சந்திக்க போகனுமா? அவ யாரு, என்ன, எதுவுமே தெரியாது... அட்ரஸ் கூட உன் கிட்ட இல்லை தானே?”
“அது பிரச்சனை இல்லை பவி. மது இன்னும் கொஞ்சம் நேரத்தில வரேன்னு சொன்னா. அவக் கிட்ட கேட்டு லாவண்யாவோட அட்ரஸ் வாங்கலாம்,” என்றாள் பாரதி!
“சரி... ஆனால் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்து இருக்கீயா? லாவண்யாவை நேரா பார்க்குறது எல்லாம் சரியா?”
“யெஸ் பவி. முதல்ல அவளைப் பத்தின என் சந்தேகம் சரியா தப்பான்னு எனக்கு தெரியனும்... தப்புனா வேற என்னன்னு யோசிக்கலாமே...”
“சரிப்பா... அப்போ இன்னைக்கு ஈவ்னிங் அவளை பார்க்க போகலாம்,” என்றாள் பவித்ரா.
🌼🌸❀✿🌷
மது தன்னுடைய வழக்கமான உற்சாகத்துடன் இருந்தாள்.
“நீங்க இல்லாம வீடே டல்லடிக்குது அண்ணி...”
பாரதி புன்னகைக்க,
“மது, இருந்தாலும் உனக்கே இது ரொம்ப டூ மச் ஐஸா தெரியலை?” எனக் கேட்டாள் பவித்ரா.
“இல்லை மேடம், நிஜமா தான் சொல்றேன்... நானாவது இப்போ தான் சொல்றேன். பெரிய அண்ணியும், அம்மாவும் ஒரு பத்து தடவையாவது நேத்தே சொல்லி இருப்பாங்க...”
“ஓஹோ, அப்படியா விஷயம்...!!! என்ன பாரு, நீ பெரிய வி.ஐ.பி. போல இருக்கே... ஆமாம் மது,