வந்திருந்தாங்க... பாவம், நேத்தும் உங்களை பார்க்க முடியலை... உங்களுக்காக கிஃப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்திருந்தாங்க...” என்றாள்.
பாரதியும் பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் பாரதி மதுவிடம்,
“மது, லாவண்யா இவ்வளவு நாளா சென்னையில் இல்லையா?” என வினவினாள்!
“இல்லை அண்ணி, அவங்க சிங்கப்பூர்ல இருந்தாங்க... அங்கே நம்ம கம்பெனியை கவனிச்சிட்டு இருந்தாங்க... கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்தியா வந்தாங்க... இப்போ அம்மா கம்பெனியில அண்ணா பார்த்துட்டு இருந்த பதவியை எடுத்துக்கப் போறாங்க...”
“ஓ!”
“உங்களை பார்க்க முடியலைன்னு லாவண்யா ரொம்ப வருத்தப் பட்டாங்க...”
“ஓஹோ...! “
“ஆனால், என்னால தான் அவங்களோட எதுவுமே பேச முடியலை... அம்மா ரொம்ப நேரம் அவங்க கிட்ட தனியா பேசிட்டு இருந்தாங்க...”
“ம்ம்ம்... ஏன் மது, லாவண்யா ஃபோன் நம்பர், அட்ரஸ் ஏதாவது உன் கிட்ட இருக்கா?”
“இருக்கு அண்ணி... அவங்க வீடு சூப்பரா இருக்கும்... இப்போ நுங்கம்பாக்கம் ஆஃபிஸ் தான் போறாங்க...”
“அப்படியா...” என்ற பாரதி, மது சொன்ன தகவலை மனதில் பதிவு செய்து வைத்தாள்! நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஆஃபீஸ் எங்கே இருக்கிறது என்பது அவளுக்கே தெரியும்... காரில் அந்த வழியாக சென்றப் போது விவேக் அவளுக்கு காண்பித்திருக்கிறான்!
திடீரென அங்கே சென்று நின்றால் சரியாக இருக்குமா என்ற கேள்வி ஒன்று அவளுக்குள் எழுந்தது... அடுத்த வினாடியே அந்த கேள்வியை துடைத்து எரிந்தாள்! சரியோ, தவறோ