முதல் முறை கண்ணகிக்கு சுருக்கென கோபம் வந்தது
”நான் எந்த துணையை பத்தி பேசறேன் நீங்க எந்த துணையை பத்தி பேசறீங்க”
”இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கோச்சிக்கற”
”இதப்பாருங்க என் முன்னாடி இன்னொரு பொண்ணைப் பத்தி பேசாதீங்க”
”ஹலோ மேடம் நான் ஒண்ணும் யாரையோ பத்தி பேசலை, நம்ம மாதவியைப் பத்தி பேசறேன்“
”அவள் என்னோட மாதவி, இன்னும் அவள் உங்களுக்கு சொந்தமாகலை, சொந்தமாகாத ஒரு பொண்ணை உரிமை கொண்டாடறது எப்படியிருக்கு தெரியுமா அநாகரீகமா இருக்கு”
”சரி சரி கோபத்தில பொங்காத, என்னாச்சி உனக்கு இத்தனை நாளும் மாதவி பத்தி சொன்னப்ப வராத கோபம் இப்ப ஏன் வருது”
”முதல்லயே நான் கோபப்பட்டிருக்கனும் உங்க மேல இரக்கப்பட்டு விட்டது என் தப்புதான்”
“ஓஹோ என் மேலயே கோபப்படுவியா”
”ஆமாம்”
”கோபப்பட்டு என்ன செய்வ”
”அடிப்பேன்”
”அடிப்பியா”
”ஆமாம் தப்பு செய்ற மாணவர்களை அடிக்கறது போல உங்களையும் பிரம்பால அடிப்பேன்”