"ம்ம்ம்..."
"ராஜம், குழந்தைகளை நல்ல படியா வளர்த்து ஆளாக்குறது தான் பெத்தவங்க கடமை... மற்றபடி அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே குழந்தைங்க இருக்கனும், செய்யனும்னு எல்லாம் நினைக்குறது சரி இல்லை... வீ ஆர் ஜஸ்ட் எ மீடியம்..."
"க்கும்... இந்த வக்கனைப் பேச்சுக்கு எல்லாம் ஒரு குறைச்சலுமில்லை..."
"குறை இருந்தாலும் இல்லைன்னாலும் நீயும் நானும் தான் வாழ்க்கை முழுக்க ஒன்னா இருக்கப் போறது...! விக்கிக்கு கல்யாணம் ஆனா அவன் அவனோட குடும்பம்ன்னு இருப்பான்... வர்ஷாவும் வேலைக்கு போய், கல்யாணம்னு ஒன்னு ஆனா அப்படி தான்... எப்போவும் உன்னோட இருக்க போறது நான் தான். என்னோட இருக்க போறவ நீ தான்!"
ராஜம் கணவர் பக்கம் ஒரு பார்வை பார்த்தாள்!
"என்ன பார்க்குற ராஜி?"
"இவ்வளவு பேச கூட உங்களுக்கு தெரியுமான்னு தான் பார்க்கிறேன், வேறென்ன!!"
"நான் உன்னோட பேசினதே இல்லையா?"
"பேசுவீங்க பேசுவீங்க, பேசாம என்ன... ஸ்கூல்ல காட்ட முடியாத கோபத்தை எல்லாம் வந்து என் கிட்ட தானே காட்டுவீங்க..."
"சாரிம்மா... அதுக்கு எல்லாம் இனி ஈடு செஞ்சிடுறேன்... விக்கிராந்துக்கு கல்யாணம் முடிஞ்சு, வர்ஷா கெட் வெல்ல வேலைக்கும் சேரட்டும், நாம வர்ல்ட் டூர் போவோம்..."
"டூரா?"
"ஆமாம், நீயும் நானும் மட்டும்... உலகம் முழுக்க சுத்தலாம்... செகண்ட் ஹனிமூனுன்னு