தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
50. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
காஞ்சனாவிற்கு உடனே பதில் சொல்லாமல் கீதா பக்கம் ஒருப் பார்வை பார்த்த ராஜீவ், “ஆமாம் அம்மா... கீதா ரொம்ப பாவம் தான்...! இந்து தான் அவக் கிட்ட சொல்லவே இல்லை...!” என்றான் கடுப்புடன்!
கீதா அவனின் பேச்சிற்கு விளக்கமும் சொல்லவில்லை, மறுப்பும் சொல்லவில்லை, மாறாக, “ராஜீவ், ப்ளீஸ் வாங்க, இப்போவே போய் ஆன்ட்டியையும் இந்துவையும் பார்த்துட்டு வரலாம்...” என்றாள் பதற்றத்துடன்.
“ஆமாண்ணா, நீ வரலைன்னா நான் வேணா அண்ணியை அந்த ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போறேன்...” என்றான் சஞ்சீவ்.
“இருடா சஞ்சீவ், உனக்கு என்ன அப்படி அவசரம்... நானும் கண்மணியும் கூட வரோம்... எல்லோரும் ஒன்னாவே போய் பார்க்கலாம்... ஏதோ அதுவரைக்கும் அர்ச்சனாக்கு பெரிசா எதுவும் இல்லையே.... சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பலாம்...” என்று தன் வழக்கமான கட்டளையிடும் குரலில் திட்டமிட்டாள் காஞ்சனா!
ஆனால் அவள் முகத்திலும் இப்போது சிந்தனை கோடுகள் தோன்றி இருந்தது.
🌼🌸❀✿🌷
காஞ்சனாவின் குடும்பத்தினர் ஒன்றாக விஸ்வா மருத்துவமனையை சென்று அடைந்தார்கள். அங்கே அர்ச்சனா இருக்கும் ரூம் நம்பரை கேட்டு தெரிந்துக் கொண்டு, அந்த அறைக்கு சென்றார்கள். அங்கே வீணா, லக்ஷ்மி, அவினாஷ் என்று வீணாவின் மொத்த குடும்பத்தினரும் இருந்தார்கள். அது போதாதென்று, நந்தினி, சேகர், மாதவி, கல்பனா என மற்ற உறவினர் பட்டாளமும் இருந்தார்கள்!
படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ச்சனாவின் முகம் சோர்ந்துப் போயிருந்தது! ஆனாலும் காஞ்சனாவின் குடும்பத்தினரை எப்போதும் போல புன்னகையோடு வரவேற்ற அர்ச்சனா,
“ஏதோ தெரிஞ்சவங்கன்னு ஹாஸ்பிட்டல்ல எதுவும் சொல்லாம இருக்காங்க... ஆனாலும்