(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

“எதை சொல்றீங்க ப்ரியா? என் கண்ணுக்கு அது வெறும் மேகமா தான் தெரியுது...!!!”

  

வர்ஷாவிற்காக என வானத்தை பார்த்திருந்த ப்ரியாவை சூர்ய அஸ்தமனத்திற்காக வானம் அணிந்திருந்த வண்ணமயமான கோலம் கவர்ந்து இழுத்தது...

   

“அங்கே நல்லா பாருங்க வர்ஷா... அந்த ஆரேஞ் பிங்க் கலந்த இடம் ஒரு கிரீடம் போல இருக்கு... கீழே இருக்க அந்த சின்ன மேகம் அழகு முகம் போல இருக்கு...”

  

ப்ரியா அதை ரசனையுடன் சொன்ன விதத்தில், அவளை ஒரு முறை பார்த்த வர்ஷா, பின் விழிகளை திருப்பி வானத்தைப் பார்த்தாள்.

   

“அட ஆமாம்... குட்டி பிரின்சஸ்...!!!”

  

“அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்...” மெல்லிய குரலில் சொன்னாள் ப்ரியா.

  

“வாவ்! என்ன ஒரு கற்பனை...!!!”

  

“அச்சச்சோ... அது கண்ணதாசன் எழுதின பாட்டுங்க வர்ஷா...”

  

“எனக்கு பிசியாலஜி, அனாடமி எல்லாம் தான் தெரியும்... பாட்டெல்லாம் தெரியாது...”

  

“அதெல்லாம் தெரிஞ்சா இதெல்லாம் தெரிய கூடாதா என்ன? எனக்கு சாங்க்ஸோட லைன்ஸ் கேட்குறது, ரசிக்குறது ரொம்ப பிடிக்கும்...”

  

“அப்போ சரி... அதை எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துக்கிறேன்...”

   

பதிலுக்கு புன்னகை புரிந்த ப்ரியா, காற்றில் சிலுசிலுத்த தன் கூந்தலை முன்னே எடுத்துப் போட்டாள்... அந்த அழகிய நீண்ட கூந்தலை பார்த்து வியந்துப் போனாள் வர்ஷா!

  

“ஹப்பா!!! என்ன திக் லாங் ஹேர் உங்களுக்கு ப்ரியா... என்னங்க இதன் ரகசியம்?”

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.