(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்

  

53. மனம் விரும்புதே உன்னை... உன்னை...

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஞ்சீவ் பல ஆட்டோக்களை நிறுத்திக் கேட்டான். ‘அண்ணா நகர் பக்கம் மழையில் வருவது கஷ்டம்,’ என்ற ஒரே பதில் தான் கிடைத்தது. சலித்துப் போய், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தப் படி அவன் நிற்க, அவன் மீது கொஞ்சம் மழை நீரை வாரி இறைத்தப் படி ஒரு பஸ் அவனை கடந்து சென்றது... சஞ்சீவிற்கு ஒரு ஐடியா தோன்றியது! இந்து நின்றிருந்த பக்கம் திரும்பி,

  

“பக்கத்தில தான் பஸ் ஸ்டாப் இருக்கு... பேசாம பஸ் பிடிச்சு போயிடலாம்...” என்றான்.

  

இந்து அமைதியாக சரி என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினாள். இருவரும் ஒன்றாக நடந்து பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பை அடைந்தார்கள். மழை நேரம் என்பதாலோ என்னவோ பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது... அதை பார்த்தப்படி இருவரும் அமைதியாக இருந்தார்கள். ஒன்றிரண்டு நிமிடத்திலேயே அண்ணா நகர் செல்லும் பஸ் வந்தது. பஸ்ஸிலும் கூட்டம் இருந்தது. ஆனால், இப்படி மழையில் நனைவதற்கு அது பரவாயில்லை என்று முடிவு செய்து பஸ்ஸில் இந்துவை ஏற சொல்லிவிட்டு, அவள் பின்னே ஏறினான் சஞ்சீவ். உள்ளே அடைத்து வைத்ததுப் போல இருந்த கூட்டத்தை விலக்கியப் படி உள்ளே சென்று, கம்பியை பிடிக்க தோதான ஒரு இடத்தில் நின்றாள் இந்து.

  

சஞ்சீவின் கண்கள் அவளையே தான் தொடர்ந்துக் கொண்டிருந்தது...

   

இந்துவிற்கு பஸ்ஸில் சென்று பழக்கம் இருக்க வாய்ப்பில்லை தான்.. அதுவும் இப்படி கூட்டமான பஸ்ஸில் சென்றிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு தான்... இருந்தாலும், அவன் சொன்னதும் மறு பேச்சு சொல்லாமல் ஏற்றுக் கொண்டதோடு, கூட்டத்திலும் அட்ஜஸ்ட் செய்து நிற்பவளை ஆச்சர்யத்தோடு மனதில் யோசித்தப் படி, டிக்கெட் வாங்கி விட்டு, இந்து கண்ணில் படுவதுப் போல அவளுக்கு பக்கத்திலேயே நின்றான் சஞ்சீவ்.

  

பொதுவாகவே நம் சாலைகளில் பேருந்து பயணம் என்பது சொகுசானது அல்ல. மழை நேரத்தில் கேட்கவே வேண்டாம்...!!! பள்ளம் மேடு எது என தெரியாமல் சில பல சமயம் பஸ் இந்த பக்கம் அந்த பக்கம் என்று ஆடி அசைந்து தான் சென்றது. இந்துவிற்கு இடது புறமாக நின்றிருந்த ஒரு இளைஞன் அது போல பஸ் சாய்ந்த நேரத்தில் வேண்டும் என்றே அவள் மேல் படுவது போல சாய்ந்தான். முதல் முறை தெரியாமல் நேர்ந்திருக்க கூடும் என்று

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.