(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 17 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, கையில் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்தான் விக்கிராந்த். நேரம் இரவு பத்தை தாண்டி இருந்தது. லேப்டாப் பேகை பைக்கில் இருந்து எடுத்துக் கொண்டு நடந்தவன், ஏதோ நினைவில் முன்பு ப்ரியாவை அந்த நாய் குட்டிகளுடன் பார்த்த இடத்தைப் பார்த்தான். என்ன அதிசயம், இப்போதும் ப்ரியா அங்கே தான் இருந்தாள்! தானாக அவனின் கால்கள் அவள் இருந்த திசையில் சென்றது.

  

இப்போது ப்ரியாவின் அருகே ஒரு சிறுமியும் இருந்தாள். அந்த சிறுமியின் கையில் ஒரு பிஸ்கட் பேக்கட் இருந்தது. விக்கிராந்திற்கு சட்டென்று விஷயம் புரிந்துப் போனது!

  

மேடம் இங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு, அந்த நாய் குட்டிகளை கவனித்துக் கொள்ள ஆள் தேர்வு செய்து, ட்ரெயினிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!!!

  

விக்கிராந்தின் முகத்தில் தானாக ஒரு புன்னகை தோன்றியது.

  

“என்னங்க பயங்கர ட்ரெயினிங் போலருக்கு,” என்றான் அவன் பரிகாசமாக!

  

சென்ற முறை போல் இல்லாமல், இந்த முறை விக்கிராந்த் பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதை முன்பே கவனித்திருந்ததால், அதிர்ச்சி அடையாமல் அவன் பக்கம் இயல்பாக பார்த்துப் பேசினாள் ப்ரியா.

  

“ஆமாம், பாவம்ல இந்த குட்டிஸ் எல்லாம்... இது சுஜிதா, வாட்ச்மேன் பொண்ணு, அவளுக்கும் இந்த குட்டீஸ் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு...”

  

ஏனோ விக்கிராந்திற்கு ப்ரியாவின் அந்த இயல்பான பேச்சு ஏமாற்றமாக இருந்தது... சில நாட்களுக்கு முன் அவள் கேள்வியும் திகைப்புமாக பார்த்த அந்த பார்வை அவனின் மனதில் வந்து போனது!

  

“சரி குட்டிஸ், காலையிலே இந்த அக்கா சாப்பாடு தருவாங்க... இப்போ நல்ல பசங்களா போய் தூங்குவீங்களாம்...”

  

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.