(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

விக்கிராந்த் ப்ரியாவை யோசனையுடன் திரும்பி பார்த்தான்!

  

“நீங்க ஆர்த்தி பக்கம் இருந்து யோசிச்சுப் பாருங்க, அவங்க கேட்டது தப்புன்னு சொல்ல முடியாது... இன் அ வே, அவங்க அப்படி நேரா உங்க அம்மா கிட்ட கேட்டது எனக்கு பிடிச்சிருந்தது... பொதுவா பார்த்தா, ஒரு சில பேர், இதை மனசில் வச்சு கருவி இருப்பாங்க, இல்லன்னா உங்க கிட்ட சொல்லி உங்க அம்மா கிட்ட பேச சொல்லி இருப்பாங்க... ஆர்த்தி அப்படி செய்யலையே? ஷி இஸ் ஸ்வீட்...”

  

இதை இப்படியும் கூட யோசிக்கலாமோ, என்று விக்கிராந்த்திற்கு முதல் முறையாக தோன்றியது!

  

“ஆன்ட்டி ரொம்ப ஸ்மார்ட்... அவங்களுக்கும் இதெல்லாம் புரிஞ்சிருக்கும்... அதனால் தான் உங்க கிட்ட இதைப் பத்தி எதையும் சொல்லாம இருக்காங்க...”

  

“அப்படி தான் இருக்குமோ...”

  

விக்கிராந்த் புரிந்துக் கொண்டான் என்று தோன்றவும், ப்ரியா மேலே எதுவும் பேசவில்லை!

   

இருவரும் அமைதியாகவே மேலும் சில படிகள் ஏறினார்கள்.

  

“எனக்கு இத்தனை வருஷமா எல்லாமே அம்மா தான் ப்ரியா! இப்போ திடீர்னு இப்படி எனும் போது...”

  

சிறுக் குழந்தையை பார்ப்பது போல் விக்கிராந்தைப் பார்த்தாள் ப்ரியா.

  

“அப்படி பார்த்தா ஆர்த்திக்கும் அப்படி தானே? அவங்களும் அவங்க அம்மா அப்பா கிட்ட க்ளோஸா தானே இருப்பாங்க? வீட்டுல ஒரே பொண்ணு, ரொம்ப செல்லமா வளர்ந்திருப்பாங்க... உங்க கிட்ட அதே மாதிரி எதிர்பார்க்குறாங்க... கல்யாணம்ன்னு வந்தாலே இதெல்லாம் சகஜம் தான்... நீங்க எடுத்து சொன்னா ஆர்த்தி புரிஞ்சிப்பாங்க... ஆன்ட்டியை பத்தி

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.