பேச்சை தொடர்ந்தான்.
“ஆர்த்தியை நினைச்சு கொஞ்சம்... கொஞ்சம் என்ன, ரொம்பவே குழப்பமா இருக்கு... அவசரப் பட்டு முடிவெடுத்துட்டேனோன்னு தோணுது...”
விக்கிராந்த் ஆர்த்தியை பற்றி அவளிடம் பேசுவான் என்று ப்ரியா எதிர்பார்த்திருக்கவில்லை! அதனால் அவளுக்கு தானாக ஆச்சர்யம் தோன்றியது... ஆனால், அதை விட, விக்கிரநாத் வருத்தத்துடன் சொன்ன விதம் அவளின் மனதை அசைத்தது!
“என்ன ஆச்சு?”
ப்ரியாவின் குரலில் இருந்த பரிவு விக்கிராந்திற்கு இதத்தைக் கொடுத்தது!
“என் ஃப்ரென்ட் ஜான்வியை உங்களுக்கு தெரியும் தானே, அவ சொன்னா, ஆர்த்தி ஏதோ அம்மா கிட்ட பேசினான்னு...”
“ஓ! ஜான்வி வேலை தானா? ஆன்ட்டி அன்னைக்கே அத்தை கிட்ட சொன்னாங்க, ஜான்வியால ஒரு விஷயத்தையும் மனசுல போட்டு வச்சுக்கவே முடியாதுன்னு...”
“அது இல்லை இப்போ முக்கியம்... கல்யாணத்துக்ற்கு முன்னாடியே இப்படி இருக்கே, கல்யாணத்துக்கு அப்புறம் இவங்க இரண்டு பேரையும் எப்படி ஹாண்டில் செய்றதுன்னு யோசிச்சாலே பயமா இருக்குங்க ப்ரியா...”
“இதுல நீங்க ஹாண்டில் செய்ய என்ன இருக்கு?”
“என்ன இப்படி கேட்குறீங்க, உங்களுக்கு தெரியும் தானே ஆர்த்தி அம்மா கிட்ட என்ன சொன்னான்னு...”
“தெரியும்! ஆனால் யோசிச்சு பாருங்க, ஆர்த்தி உங்க கிட்ட அதைப் பத்தி சொல்லி சண்டை போடலை, கோபப் படலை... நேரா ஆன்ட்டி கிட்ட தானே பேசினாங்க? அவங்க மனசுல தப்பான எண்ணம் இல்லை... நினைச்சதை அப்படியே ஆன்ட்டி கிட்ட கேட்டுட்டாங்க...”