(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

ஏற வச்சிட்டேன்...”

  

ப்ரியா குரலில் ஒலித்த குற்ற உணர்ச்சி விக்கிராந்திற்கு வியப்பைக் கொடுத்தது... கடந்த சில நிமிடங்களில் இது எத்தனையாவது ‘ரசம்’ என்று மனதினுள் கணக்கிட முயன்றுக் கொண்டே பேசினான்...

  

“அப்படி டையர்டாக நான் என்ன பிசிகலா நடந்து திரிஞ்சா வேலை செய்றேன்? காலையில இருந்து ஒரே சீட்டில இருந்து தானே வேலை செய்றேன்... ஒரு ப்ரோபோசல் ரெடி செய்துட்டு இருக்கேன் அதனால் காலையில் இருந்து ஃபுல்லா கால்ஸ் தான்...”

  

“ஓ! உடம்பு வருத்த வேலை செய்யலைனாலும், உங்க மூளைக்கு வேலை கொடுத்துட்டே தானே இருக்கீங்க? அதுவும் கஷ்டமானது தானே... ரெஸ்ட்டே இல்லாமல் இது மாதிரி லேப்டாப் பார்த்து வேலை செய்றதும் ஈஸி இல்லையே...”

  

“உங்களுக்காவது புரியுதே! எல்லோரும் என்னவோ நாங்க ஏ.சி ரூமில் ரெஸ்ட் எடுக்கிறோம் நினைக்கிறாங்க...”

  

“அவரவர் கஷ்டம் அவரவருக்கு தான் தெரியும்... சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க...”

  

“எங்கே இருந்து ரெஸ்ட் எடுக்க...” என்றான் விக்கிராந்த் அலுப்புடன்.

  

ப்ரியா என்ன ஏது என்று தூண்டி துருவாமல் அவனை அமைதியாக பார்த்தாள்...

  

ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய விக்கிராந்த், ஒரு முடிவு செய்தவனாக பேசினான்!

  

“ரொம்ப குழப்பமா இருக்குங்க ப்ரியா...”

  

எதனால் இதை அவளிடம் சொல்கிறோம் என்று விக்கிராந்திற்கு புரியவில்லை... ஆனால் அவளிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது...!

  

ப்ரியா அவனே பேசட்டும் என்பது போல் அமைதியாக இருந்தாள். விக்கிராந்தும் அவனே

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.