அடுத்த என்ன பெரிய அணுகுண்டை புதிதாக போட போகிறானோ என்ற எதிர்பார்ப்பில் இருந்த கிருத்திகா, ஆச்சர்யம் மின்ன அவனைப் பார்த்தாள்.
“நிஜமாவே சொல்றேன் கீர்த்தி... நீ இப்படி பேசுறது, கோபப் படுறது, செல்லம் கொஞ்சுறது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு...”
“அப்புறம்????”
“லாஜிக்கலா யோசிச்சுப் பாரேன், நீ நிஜமாவே என் மனைவி கீர்த்தி தானா???”
கிருத்திகா தியாகராஜன் கேட்பது புரியாமல் விழித்தாள்!
“புரியலையே!!!! நான் கிருத்திகா இல்லைன்னு சொல்றீங்களா?”
“இல்லை அப்படி இல்லை... நீ கிருத்திகா தான்... ஆனால், நீ என் மனைவி கிருத்திகா இல்லை...”
“ரொம்பஆஆஆஅ நல்லா புரியுது... தெளிவா சொல்றீங்க சார்...”
தியாகராஜன் அவளின் பேச்சில், அதன் தோரணையில் கவரப் பெற்றவனாக ரசனையுடன் அவளைப் பார்த்தான்...
ஆனால் உடனேயே தான் செய்யும் காரியம் தவறு என்று தோன்றவும், பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு,
“குழப்பாம தெளிவா சொல்றேன்,” என்றான்
“சொல்லுங்க...”