துளைத்த கமகம பிரியாணி வாசனையில் கவரப்பட்டு நின்றான்.
கதவு திறந்த சத்தம் கேட்டு கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்த கிருத்திகா,
“நீங்க தானா...?” என்று கேட்டு விட்டு, மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.
கையிலிருந்த பிட்ஸா டப்பாவை டேபிளில் வைத்து விட்டு, கிச்சனினுள் சென்ற தியாகு, கேஸ் ஸ்டவ்வின் மீதிருந்த பாத்திரத்தை கவனித்த படி,
“நான் பிட்ஸா வாங்கிட்டு வந்தேன்...” என்றான்.
“ஓ, நான் எனக்கு கொஞ்சமா பிரியாணி செய்தேன்...” என்றாள் அவள் அவன் பக்கம் பார்க்காமலே.
“பிரியாணியா??? உனக்கு சமைக்க தெரியுமா???”
“ஆறு மாசமா ஹோட்டல் நடத்துற வீட்டுல இருந்திருக்கேன், இது கூட தெரியாதா என்ன?”
“நீ அங்கே இருந்தப்போ சமையல் எல்லாம் செய்தீயா கீர்த்தி?”
தியாகராஜனின் குரலும், அதில் இருந்த கரிசனமும் மனதை இதமாக வருட,
“ம்ம்ம்... அம்மா வேண்டாம்னு தான் சொல்வாங்க ஆனாலும் நான் செய்வேன்...” என்றாள் கிருத்திகா!
“ம்ம்ம்ம்... ஓகே...”
“அப்போ நீங்க நைட்டுக்கு பிட்ஸா சாப்பிட்டுறுவீங்க தானே?”
“ஏன் கேட்குற?”