”உயில் பத்திரம் இருந்தாதானே மக்களுக்கு உதவ முடியும், பத்திரம் இல்லையே இப்ப என்ன செய்றது” என கலங்கிய ஆண்டாளிடம் அகத்தியனின் ஆவியோ
”பத்திரம் இல்லைன்னா என்ன 40 வருஷமா நமக்கு இருந்த சொத்துக்கள் எல்லாமே கேட்பார் யாருமில்லாத காரணத்தால அரசாங்கம் கையகப்படுத்திடுச்சி, இதுக்கு முழு காரணமும் அங்கமுத்து மாமாதான் அவர்தான் உயில் எதுவும் எழுதி வைக்கலை இந்த சொத்துக்கு வாரிசுகளும் இல்லை, அதனால இதை நீங்களே எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டதால அரசாங்கம் எடுத்துக்கிச்சி, இனி தன்னால அந்த சொத்துக்கள் மக்களை போய் சேர்ந்துடும், நீங்க கவலைப்படாதீங்க கடைசி நேரத்தில அங்கமுத்து மாமா நல்லதுதான் செய்திருக்காரு, அதோ அவர்தான் அங்கமுத்துவோட பேரன், அவனும் இந்த தன் தாத்தாவோட கடைசி ஆசைக்காக நிறைய முயற்சிகள் செய்திருக்காரு அவரு நல்லவரு” என சொல்ல அதில் ஆண்டாளும் நிம்மதியாக உடனே அவரின் உருவம் மறைந்தது அவரின் ஆத்மாவும் சாந்தியடைந்தது.
அகத்தியனின் ஆவியிடம் வந்த அவனின் மனைவி நாச்சியாவின் ஆவி கண் கலங்கியது
”எதுக்கு கண்கலங்கற உண்மையிலயே நீதான் இந்த வீட்டு வாரிசு, நான் கிடையாது, நீயிருக்க வேண்டிய இடத்தில நான் இருந்தேன், எப்படியோ இந்த ஊர் இன்னும் ஒண்ணா இருக்குன்னா அதுக்கு நீதான் காரணம் நாச்சியா”
“நீங்க இல்லைன்னா இதெல்லாம் சாத்தியமில்லை, அந்த கார்கோடகனோட சூழ்ச்சியால என்னால உங்களுக்கு ஒரு பிள்ளையை தரமுடியாம போயிடுச்சி, அதை நினைச்சாதான் வருத்தமா இருக்கு”
”வருத்தப்படாத நமக்கு பிள்ளையில்லைங்கறதும் நல்லதுக்குதான், பாவம் பிள்ளையிருந்து அது கார்கோடகன் கையால கஷ்டப்பட்டு செத்திருக்கும், அதை பார்க்கனுமா நீ”
”வேணாம் வேணாம்“
”அப்புறம் என்ன விடு இத்தனை நாளும் நாம எதுக்காக காத்திருந்தோமோ, அது நடந்து
good series