தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 28 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பொதுவாக வேறு யாராவது ப்ரியா சொன்ன பதிலை சொல்லி இருந்தால் விக்கிராந்த் கண்டுக்கொள்ளாமல் விட்டிருந்திருப்பான்! அது அவரவர் பர்சனல் சாய்ஸ் என்ற முடிவிற்கு வந்திருப்பான்!
ஆனால், ப்ரியா சொன்ன பதில் மட்டுமல்லாமல், அவள் அதை கசப்புடன் சொன்ன விதம் அவனை சும்மா இருக்க விடவில்லை! அதற்காக அவளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கவும் அவனுக்கு பிடிக்கவில்லை!
“ஏன் அப்படி?” சிம்பிளாக கேட்டு விட்டு ப்ரியாவிடம் ஏற்படும் மாற்றத்தை கூர்ந்து கவனித்தான்!
ப்ரியா உடனடியாக விக்கிராந்திற்கு பதில் சொல்லவில்லை! அவன் அமர்ந்திருந்த சுவரிலேயே அவனிடம் இருந்து சிறிது இடைவெளி விட்டு சாய்ந்து நின்றாள்! அவனின் கேள்வி காதில் விழுந்தும் கேட்காததாக பாவனை செய்து, கைப்பையில் எதையோ தேடினாள்...
“ஃபோனை எதுக்கும் எடுத்து கையில வச்சுக்கிறேன், சில சமயம் சத்தம் கேட்காது...” மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே ஹான்ட்பேகில் இருந்த ஃபோனை கையில் எடுத்தாள் ப்ரியா!
அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை என்பது விக்கிராந்திற்கு புரிந்தது! இருந்தாலும் அவனால் அமைதியாக இருக்க முடியலவில்லை... ப்ரியா பற்றி அனைத்தையும் தெரிந்துக் கொள்ள அவன் விரும்பினான்.
“ஃபோனை தான் கையில எடுத்துட்டீங்களே, இப்போ சொல்லுங்க, ஏன் உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லை?”
“ப்ச்...”
குரலில் மட்டும் இல்லாமல் முகத்திலும் அலுப்பை வெளிக்காட்டி அமைதியாக இருந்தாள் ப்ரியா.