மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 31 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“வினாயக் என்ன செய்றீங்க?” சக்தி கேட்டுக் கொண்டே ஜீப்பில் இருந்து இறங்க, சத்யாவும் அவளைத் தொடர்ந்தாள்.
“திரும்ப ஜெயிலுக்கு போக பிடிக்கலை சக்தி மேடம். நான் எங்கேயாவது போயிடுறேன்!” வினாயக் தயங்கி தயங்கிப் பேசினான்.
“அப்படின்னு ப்ரியம்வதா உங்களுக்கு ஐடியா கொடுத்து காரும் கொடுத்தாளாக்கும்?? என்ன வினாயக் நீங்க? ப்ரியம்வதா உணர்ச்சிவசப்பட்டு ஐடியா கொடுத்தா, நீங்களாவது என்ன செய்றீங்கன்னு யோசிக்க வேண்டாம்?”
“சக்தி மேடம், அவர் போகட்டும் விடுங்க. நீங்க எங்களுக்கு ஹெல்ப் செய்வீங்கன்னு நினைச்சேன், நீங்க அவரை மாட்டி விட்டுட்டீங்க. ப்ளீஸ், அவர் போகட்டும் விடுங்க!” ப்ரியம்வதா சக்தியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது போலீஸ் ஜீப் அந்த இடத்திற்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய அபினவ் வினாயக்கை நோக்கி வந்தான்.
“சந்திரமௌலி மர்டர் கேஸ்ல உங்களை அரெஸ்ட் செய்றோம் வினாயக்.” கையிலிருந்த பேப்பரை கொடுத்தான் அபினவ்.
வினாயக் குழப்பத்துடன் அங்கிருந்த பெண்களைப் பார்த்தான்.
“சார், வினாயக் தப்பு எதுவும் செய்யலை!” அபினவின் முன் செல்ல முயன்ற ப்ரியம்வதாவை சத்யா தடுத்தாள்.
“வினாயக், சப் இன்ஸ்பெக்டர் கூட போங்க. உங்களுக்கு தெரிஞ்ச உண்மையை மட்டும் சொல்லுங்க. எதுலேயும் சைன் போடாதீங்க. சீக்கிரமே உண்மை வெளி வந்திரும். இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இருங்க.” சக்தி வேக வேகமாக வினாயக்கிற்கு அறிவுரைகள் வழங்கினாள்.
வினாயக் குழப்பம் அப்பிய முகத்துடன் தலை ஆட்டி விட்டு போலீஸுடன் நடந்தான். போலீஸ் ஜீப் கிளம்பும் முன் அவன் பார்வை ப்ரியம்வதாவிடம் வந்து நின்றது.