மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 32 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“அம்மா?”
ப்ரியம்வதா அதிர்ந்துப் போயிருப்பதை கலைவாணியாலும் உணர முடிந்தது!
“பின்னே என்ன ப்ரியா! ஏன் உண்மை எது, பொய் எதுன்னு உனக்கு புரிய மாட்டேங்குது? ஐஸ்வர்யா சொல்றதுல தப்பென்ன இருக்கு?”
“அம்மா ப்ளீஸ்!”
“ஸ்ரீனிவாஸ் எதுக்கு கண்ணு மண்ணு தெரியாம உனக்கு சப்போர்ட் செய்றார்ன்னு நினைக்குற?”
“அம்மா?”
“புரிஞ்சுக்கோ ப்ரியா. உனக்கு ஏத்த துணை ஸ்ரீனிவாஸ் தான். உன் மேல இருக்க அபிமானத்தால ஐஸ்வர்யா கிட்ட அப்படி கத்துறார். நீ செய்றது பைத்தியக்காரத்தனம்னு தெரிஞ்சும் உனக்கு சப்போர்ட் செய்றார். அவரை வேண்டாம்னு சொல்லிட்டு, உன்னை ஒரு பொருட்டாவே நினைக்காத வினாயக்குக்காக எதுக்கு இப்படி உறுகுற?”
ப்ரியம்வதா வாயடைத்துப் போயிருந்தாள்.
“வினாயக்கை உனக்கு எவ்வளவு வருஷமா பழக்கம்? இவ்வளவு நாள் அவன் உன்னை ஒரு பொண்ணா நினைச்சு பார்த்திருக்கானா? அவனைப் பொறுத்த வரைக்கும் நீ கூட வேலை செஞ்சவ, சமயத்துல உதவின ஃப்ரென்ட் அவ்வளவு தான். அதை தாண்டி யோசிக்க அவனுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. அப்படி பட்டவனுக்காக நீ பின்னாடியே போறது சரியா? அது உனக்கே நல்லதுன்னு படுதா?”
“அம்மா, என்னை குழப்பாதீங்க!”
“நான் குழப்பலை. நேரடியாவே தான் சொல்றேன். வினாயக் உன் அன்பிற்கு தகுதியானவன் கிடையாது. அந்த தகுதி இருக்குறது ஸ்ரீனிவாஸ்க்கு தான்.”