“அவ நல்லதுக்காக தான் பேசுறேன் ஸ்ரீனி. எனக்கென்ன அந்த வினாயக் மேல பகையா, பாசமா? காதல் அறிவை மழுங்கடிச்சு கண்ணை மறைக்கும். அதனால தான் ப்ரியம்வதாவால சரியா யோசிக்க முடியலை. அதுக்காக நாம சும்மா இருக்க முடியுமா? நான் ஒன்னும் வினாயக் எப்படியாவது போகட்டும்னு சொல்லலையே, அவனோட மென்டல் ஸ்டேட் பத்தி போலீஸ்க்கு சொன்னா அவனுக்கு ஹெல்ப் செய்யும்ன்னு தானே சொன்னேன்.”
“ஏய்!“ கோபத்துடன் கத்த ஆரம்பித்த ப்ரியம்வதாவின் கையை பிடித்து தடுத்தான் ஸ்ரீனிவாஸ்.
“ப்ரியம்வதா, நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். காம் டவுன். ஆன்ட்டி, நீங்க அவங்களை அழைச்சுட்டுப் போங்க!” ஸ்ரீனிவாஸ் ப்ரியம்வதாவின் கையை கலைவாணி பக்கம் நீட்டினான்.
கலைவாணி மறுக்காமல் மகளின் கையை பிடித்து அழைத்துச் சென்றாள்.
“
...
This story is now available on Chillzee KiMo.
...
படி குத்தி, கிழிக்குற மாதிரி பேசி வலியை ஜாஸ்தி செய்வீயா?”
ஸ்ரீனிவாஸ், ஐஸ்வர்யா நடுவே நடந்த உரையாடல் எதிர் திசையில் நடந்துக் கொண்டிருந்த கலைவாணி, ப்ரியம்வதாவின் காதிலும் விழுந்தது. ஸ்ரீனிவாஸின் பேச்சு ப்ரியம்வதாவிற்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது!
“அம்மா, கையை விடுங்க, நான் ஸ்ரீனிவாஸ்க்கு ஒரு நன்றி சொல்லிட்டு வரேன்,” என்றாள் ப்ரியம்வதா.