சட்டுன்னு கல்யாணத்தையே வேணாம்னு சொல்லிட்டுப் போறான்னா அவன் எந்தளவுக்கு அயோக்கியனா இருந்திருப்பான், எந்தளவுக்கு மிரட்டியிருப்பான் பாரு, அவன் சொந்தபந்தங்களும் கல்யாணம் வேணாம்னு சொன்னதும் எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க, நான் இருந்து எல்லா செலவுகளையும் செட்டில் பண்ணிட்டு வந்து நிக்கறேன்
பணத்தை பத்தி எனக்கு கவலையில்லை, நம்ம பொண்ணு வாழ்க்கை இப்படியா ஆகனும், அதான் என் கவலையே அந்த தில்லையை பத்தி உன் புருஷன் உன்கிட்ட ஏதாவது விசயம் சொல்லி வைச்சாராம்மா” என கைலாசம் ஆஸ்பிட்டலில் ஆப்ரேஷன் தியேட்டர் முன்பு கேட்க அதற்கு அவரது தங்கை சிவரஞ்சனியோ
”எனக்கு என்ன அண்ணா தெரியும், அவரும் பெரிசா என்கிட்ட எதையும் சொன்னதில்லை, அவரே அமைதியானவரு, நல்லவரு, அவருக்கு எப்படின்னா எதிரிங்க இருப்பாங்க“ என கண்கள் கலங்கியபடியே சொல்ல கைலாசத்தின் பார்வை சம்யுக்தாவின் மீது விழுந்தது.
மணப்பெண் கோலத்தில் கையில் தாலியை வைத்துக் கொண்டு ஆப்ரேஷன் தியேட்டரை வெறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல இருபக்கமும் அத்தையும் அத்தை மகளும் இருந்தார்கள். அதைப் பார்த்தவர் வருந்தினார்
”பாரு அங்க பாரு உன் பொண்ணைப் பாரு, எப்படியிருக்காள்ன்னு மனசு உடைஞ்சிப் போயிருக்கா,
கல்யாணம் நின்னது ஒண்ணு,
இந்த ஊர்க்காரங்க முன்னாடி அவமானப்பட்டது ஒண்ணு,
நம்ம சொந்த பந்தமே அவளை பத்தி பேசாத பேச்சில்லை,
என்னவோ இவள் மேலதான் குறையிருக்கறதா பேசிட்டாங்க,
இதுல உன் புருஷனுக்கு வேற உடம்பு சரியில்லை,