போகட்டும்னு அமைதியா இருந்தா உன் இஷ்டப்படி நடந்துக்கற, இதப்பாரு எதுக்கும் ஒரு எல்லையிருக்கு, என் பொறுமைக்கு இருந்த எல்லையும் முடிஞ்சி போச்சி இதுக்கப்புறம் என்னை நீ டார்ச்சர் பண்ண கொன்னுடுவேன் கிளம்பு இங்கிருந்து” என ஆக்ரோஷத்துடன் பேசத அவளோ அசையாமல் நின்றாள். அந்நேரம்
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
மீண்டும் ரிங் டோன் ஒலித்தது. முழுதாக பாடல் ஒலிக்கும் வரை அவளையே கோபமாக பார்த்துவிட்டு பின் தனது செல்போன் ஆன் செய்தான். அவளின் மீது இருந்த கோபத்தில் போனை எடுத்து யாரென கூட பார்க்காமல்
”என்ன வேணும் உனக்கு என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா, சும்மா தொல்லை பண்ணிக்கிட்டு இப்படியே என்னை டார்ச்சர் பண்ண, இரக்கமே இல்லாம கொன்னுட்டு போயிட்டே இருப்பேன்” என கோபத்தில் சொல்லிவிட்டு போனை வைத்தான்.
ஏதோ ஒரு அல்ப திருப்தியும் பட்டுக் கொண்டான். ஆனால் மறுநொடியே மீண்டும் போன் அடித்தது
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
இந்த முறை தில்லை அமைதியாகப் பேசினான்
”ஹலோ யாரு, ஆஆ நீயா, அது வந்து சாரி, சரி இல்லை இல்லை அய்யோ அப்படியில்லை,