“ஹுஹும்... இல்லம்மா... எனக்கு பிஸ்னஸ் சர்க்கிள் தாண்டி தெரிஞ்ச பொண்ணுங்க ரொம்ப கம்மி... அப்படிலாம் யார் மேலேயும் எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை...”
“அப்போ நானே உனக்கு பொண்ணு தேட ஆரம்பிக்கட்டுமா??”
“சரிம்மா...”
“சுபா, எனக்கு கொஞ்சம் ஃப்ரிட்ஜுல இருந்து தண்ணி எடுத்து தரீயா?” என பிரகாஷ் கேட்க,
“எடுத்து தரேங்க... நீங்க அவன் கிட்ட சப்ஜக்ட் மாத்தாம பேசிட்டு இருங்க,” என்று சொல்லி விட்டு சென்றாள் சுபாஷினி.
அவள் அங்கிருந்து சென்ற உடன் மகன் பக்கம் பார்த்த பிரகாஷ்,
“ஆகாஷ், உங்க அம்மா மனசு பூ மாதிரி. எங்களுக்கு கல்யாணம் ஆன நாள்ல இருந்து அவளை பொக்கிஷமா பாதுகாத்து பார்த்துக்குறேன்,” என்றார் சீரியஸாக!
“தெரியும்பா...”
“உனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்த அப்புறம், நான் இருந்தாலும் இல்லைனாலும், சுபாவை அப்படியே பார்த்துக்குற கடமை உனக்கும் இருக்கு...”
“என்னப்பா... இப்போ எதுக்கு இந்த பேச்சு... இதெல்லாம் நீங்க சொல்லாமலே எனக்கு தெரியாதா? அம்மா எனக்கும் உயிர்ப்பா...”
“கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி சொல்றது ஈசி... ஆனால் அதுக்கு அப்புறம் அதை நடைமுறை படுத்துறது ஈசி இல்லை... உனக்குன்னு ஒரு குடும்பம் வந்தப்புறம் அவங்களுக்கு இம்பார்டன்ஸ் கொடுக்குறது தான் சரி... ஆனால், உன் மனைவியை செலக்ட் செய்றப்போ உங்க அம்மாவையும் கொஞ்சம் மனசில வச்சுக்கோப்பா... நீ எங்களுக்கு ஒரே மகன்... வர போற பொண்ணு உங்க அம்மா கிட்ட நல்ல விதமா இருந்தா நல்லா இருக்கும்... இது ஒரு