“உனக்கு அந்த படம் பிடிக்காதா? ஏன் சுபா? எனக்கு ரொம்ப பிடிக்கும்... நிறைய தடவை பார்த்திருக்கேன்,” என்றாள் ஜோதி ஆச்சர்யத்துடன்.
வசீகரனும்,
“எனக்கும் அந்த படம் பிடிக்கும். அதுல பிடிக்காத மாதிரி என்ன இருக்கு?” என்றார் கேள்வியாக.
ஆகாஷும், அக்ஷராவும் கூட அந்த படத்தை பார்த்திருந்தார்கள்... அவர்களுக்கும் சுபாஷினிக்கு ஏன் அந்த படம் பிடிக்காமல் போனது என்று புரியவில்லை...
அனைவரும் கேள்வியாக அவளையே பார்க்க, வேறு வழி இல்லாமல் விளக்க தொடங்கினாள் சுபாஷினி.
“அது படம்... சும்மா என்டேர்டேயின்மென்ட்க்கு மட்டும் தான்... ஆனால் அந்த கான்சப்ட் எனக்கு பிடிக்கலை... ஹீரோ, ஹீரோயின் லவ் செய்றதை நேரடியா சொல்லி இருந்தா கூட பரவாயில்லை... ஹீரோயின் என்னடான்னா கல்யாணம் ஃபிக்ஸ் ஆன அப்புறமும் மனசில இருக்கிறதை சொல்லாமலே இருக்கா... அதுவும் அந்த ஹீரோ அங்கேயே தான் இருக்கான்... ஹீரோவும் எதையும் சொல்லாம அந்த அப்பாவி மாப்பிள்ளைக்கு ஃப்ரென்ட் மாதிரி நடிக்கிறான்...”
“நீ ரொம்ப யோசிக்குறப்பா... எங்கேஜ்மென்ட் தானே ஆச்சு? கல்யாணத்துக்கு முன்னாடி இரண்டு பேரும் லவ் செய்றது எல்லோருக்கும் தெரிஞ்சிருச்சு தானே?” என்றாள் ஜோதி!
“இல்ல ஜோதி... என்னால அதை சரின்னு ஏத்துக்க முடியலை... அது என்ன அது அப்பாக்கு பயந்து சரின்னு சொல்வாளாம்... ஆனால் அவளுக்கு பிடிக்காதாம்... அப்போ அந்த மரியாதை, பயம் எல்லாமே நடிப்பு தானே? ஒன்னு உண்மையா தைரியமா இருக்கனும், இல்லை இது தான் எனக்கு சரின்னு அக்சப்ட் செய்துட்டு இருக்கனும்... அதை விட்டுட்டு, இப்படி கொஞ்சம், அப்படி கொஞ்சம்ன்னு இருந்தா என்ன அர்த்தம்? இப்படி இருக்குறவங்க கல்யாணத்துக்கு