அப்புறம் மட்டும் சின்சியரா இருப்பாங்கன்னு எப்படி சொல்ல முடியும்? இரண்டு பேருல ஒருத்தராவது அவங்க காதலை நேரடியா தைரியமா சொல்லி இருந்திருந்தா கூட பரவாயில்லை... இவங்க செய்ததால எத்தனை பேருக்கு கஷ்டம், மனவருத்தம்? அந்த மாப்பிள்ளை, அவனோட ஃபேமிலி எத்தனை பேர்... எது செய்தாலும் அதுல ஒரு நேர்மை வேணும்...”
சுபாஷினி சொல்லி முடித்த போது ஒருவரும் பதில் சொல்லவில்லை...
அந்த பொழுதுபோக்கு படத்தை இப்படி ஒரு கோணத்திலும் பார்க்க முடியுமா என்று வாயடைத்துப் போயிருந்தார்கள்...
பிரகாஷ் மட்டும் புன்னகையுடன் அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்...
“என்ன எல்லோரும் சிலையா மாறிட்டீங்க...???”
“வாவ், ஸ்வீட் ஹார்ட், எப்படி எல்லாம் யோசிக்குறீங்க!!!! உங்க காலை காட்டுங்க நேரா விழுந்துடுறேன்...”
அக்ஷ்ராவின் கன்னத்தில் செல்லமாக தட்டினாள் சுபாஷினி!
“நீ சொல்றதும் ஒரு விதத்துல சரி தான் சுபா... ஆனா படம் தானேன்னு ஈசியா எடுத்திருப்பாங்க... ஜாலியா பார்த்துட்டு நாமளும் மறந்திரனும்,” என்றாள் ஜோதி.
“அது சரி தான் ஜோதி... அந்த படம் நல்லா தான் இருந்துச்சு என்ன, எனக்கு அந்த கான்சப்ட் பிடிக்கலை...”
அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஆகாஷ் மீண்டும் தனக்குள்ளே மூழ்கிப் போனான்...
ஆனால், இந்த தடவை அவன் சந்தோஷமான மனநிலையில் இல்லை...
சுபாஷினி சற்று முன் சொன்ன விளக்கம் அவனையே குறி வைத்து தாக்கிய கூர்மையான