(Reading time: 15 - 29 minutes)

 

ன்றிரவு,

" சுபா நாளைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வாடி.. ஐ மிஸ் யு "

" அர்ஜுனை விட நீதாண்டி என்னை ரொம்ப மிஸ் பண்ற ! இது விஷயமா நான் அர்ஜுன் கிட்ட பேசணும் "

" அம்மா தாயே வேண்டவே வேண்டாம்.... ஏற்கனவே மாமா நான் உன்கிட்ட போன்ல பேசும்போதெல்லாம் என்னை சக்களத்தியை  பார்க்குற மாதிரி முறைக்கிறார்....அவர் கண்ணுல மட்டும் நெருப்பு வர்ற ஷக்தி இருந்தா நான் காலி "

" ஹா ஹா சரிதான் ... ஓகே டி நாளைக்கு பேசலாம் .... இப்போ தூங்கலாம் ...குட் நைட் "

" அஹெம் அஹெம் ............ நீ  ஏன் குட் நைட் சொன்னேன்னு தெரியும் .... உங்க ஆளு செல்போன் கையுமா தோட்டத்துல வாக்கிங் போறாரு .... நடத்து நடத்து "

 சிரித்தப்படி செல்போன் அணைத்தவள் தன் ஜோடிகுயிலுடன் காதல் காவியம் பேச அன்றைய இரவு இனிமையாய் சென்றது.........

( நாளைக்கு அண்ணனும் தங்கச்சியும் அர்ஜுன் வீட்டுக்கு போறாங்களா ? முதல்ல யாரு மாட்டிக்கபோரா ? ஜானகியின் ஜோடி யாரு ? இதெலாம் அடுத்த எபிசொட் ல சொல்லலாம் நெனச்சேன் .......... பட் இந்த எபிசொட் லேட் ஆனதுக்காக உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கதை போனஸ் )

றுநாள், தன் பிரியமான தோழியின் வார்த்தைக்கு கட்டுபட்டு அர்ஜுனனின் வீட்டிற்கு காலையிலே விஜயம் தந்தாள் சுபத்ரா..... வாசலில் நின்ற அர்ஜுன்,

" வாங்க இளவரசியாரே "

" என்ன அர்ஜுன் ? எப்போ பார்த்தாலும் கிண்டல்... என் பேரு மேல என்ன வஞ்சம் உங்களுக்கு ..ஒன்னு சுபின்னு சொல்றிங்க இல்லன்னா இளவரசி தான் ..வேறேதும் இல்லையா ? "

" ஹஹஹ ........... சுபத்ரா, சுபி, சுபா, மித்ரா, சுப்பு, சுகி, கண்மணி, செல்லம், இளவரசி, ராட்சசி சாரி அழகான ராட்சசி, பேபி, டார்லிங், தேனடை, பட்டுகுட்டி, தங்க கட்டி ................................... இப்படி நிறைய பேரு இருக்கு...இது போதுமா இல்ல இன்னும் வேணுமா ? " என அவன் தோரணையாக கேட்க , இரு கரங்களை கூப்பி

" போதுமே ..... இதுவே போதும் ...... ஜானு எங்கன்னு சொல்றிங்களா ? “

“அவ உனக்கு பிடிக்கும்னு தோட்டத்துல முல்லை பூ  பறிச்சு அங்கேயே ஊஞ்சல்லே உட்கார்ந்து சரம் பின்னிட்டு இருக்கா ? "

" ஹேய் ..... வாவ் ................."

" இரு இரு ..அம்மாவுக்கு ஒரு ஹாய் சொல்லிடு போக கூடாதா? "

" ஹாய் என்ன ? என் அத்தை கையால ஒரு காப்பியே குடிச்சுட்டு அப்பறமா தோட்டத்துக்கு போறேன் சரியா ?  ஆமா  நீங்க ஏன் வாட்ச்மேன் மாதிரி வாசலிலே நிக்கிறிங்க ? "

" உன்னை பார்த்த நாள்ல இருந்தே அதானே என் வேலை ........சரி சரி அதெலாம் சர்ப்ரைஸ் நீ உள்ள போ " என்று கண் சிமிட்டினான் .... தனகென்ன வந்தது என்பது போல் தோல் குளுக்கி சென்றவளுக்கு நடக்க போவது நிச்சயம் தெரிய வாய்ப்பில்லைதான் !

அவள் உள்ளே சென்ற அடுத்த ஐந்து நிமிடங்களில்,

" வாங்க கிருஷ்ணா ...வாங்க ரகு "

அவர்களை  இன்முகத்தோடு வரவேற்றது நம்ம அர்ஜுனந்தான் .... ஆனால் வந்த இருவருக்குமே அவனின் வரவேற்ப்பு அதிர்ச்சியை தந்தது .... நம்ம கிருஷ்ணா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாலும் ரகு இருக்காரே .,.... கண்களை அகல விரிச்சு ..நம்ம சுபத்ரா முதல் முதல்ல அர்ஜுனனை  எப்படி பார்த்தாளோ அதே லுக் விட்டாரு ...அதற்குள்ள ரகுவோடு செல்போன் சிணுங்க , மற்ற இருவரிடமும் " எஸ் கியுஸ் மீ " என்று விட்டு கொஞ்சம் தள்ளி நின்று பேசினான் ரகுராம்...( கிரேட் எஸ்கேப் ரகு ! )

" அர்ஜுன் எங்களை எதிர்பார்த்திங்களா ? "

" ஆமா..உங்களுக்காகத்தான் வைட்டிங்..... ஷ்ஷ்ஷ்ஷ் சுபத்ரா உள்ளதான் இருக்கா .... சர்ப்ரைஸ் நு சொல்லிருக்கேன் ..... வாங்க சைலெண்டா போவோம் "

" அர்ஜுன் நீங்க சொல்றது எங்களுக்கே சர்ப்ரைஸ் தான் ....எப்படி தெரியும் ? "

" ஒற்றர்கள் உங்களுக்கு மட்டும்தான் இருக்காங்களா எங்களுக்கு இருக்க கூடாதா ? "

புரிந்தும் புரியாமலும் கிருஷ்ணா பார்க்க ,

" உங்களுக்கு ஒரு விஜய் டிடெக்டிவ் ஆன மாதிரி எனக்கு அஜித்னு ஒரு டிடெக்டிவ் தான் சொன்னாரு "

" ஆஹா செம்ம ஷார்ப் பாஸ் நீங்க ! " என்று சிரித்தவன் அன்புடன் அர்ஜுனனை தழுவி நட்பு பாராட்ட அதே நேரம் ,

" ராம் .............................. " என்று ஜானகி கூக்குரலிட்டு அழும் குரல் கேட்டது ............

சத்தம் கேட்ட அர்ஜுனின் தாயாரும் சுபாவும் தோட்டத்திற்கு வர , அதே நேரம் அர்ஜுனும் கிருஷ்ணனும் அங்கே விரைந்தனர் ........ தன் தோழி கண்ணீருடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபத்ரா , அங்கே நின்றிருந்த ரகுவையும் கிருஷ்ணனையும் பார்த்து மயக்கம் போடாத குறைதான் .......... ! அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க ,

அடுத்து என்ன ஆச்சுன்னு யோசிச்சுகிட்டே இருங்க ...... ( இனி யாரும் கிருஷ்ணாவை ஜானகியோடு கற்பனை பண்ண கூடாது ....ஏன்னா அப்பறம் கிருஷ்ணாவின் ஜோடியை யாரு சமாதானம் பண்றது ? ... அடுத்த எபிசோட்ல சந்திக்கிறேன் )

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.