" நீதான் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லனும்னு சொன்னியே? நான் சொல்லிட்டு வரேன் ... "
" ஏன் நானும் வந்தா ஆகாதா ? "
" அதுக்குன்னு நேரம் வரும் அப்போ கண்டிப்பா ரெண்டு பெரும் ஒண்ணா நிற்கலாம் ..... அம்மா அப்பா தான் முதற்கடவுள் ...அவங்க நம்மளுக்கு சம்மதம் தரட்டும் அதுக்கு அப்பறம் நாம ஜோடியா தேங்க்ஸ் சொல்லலாம் ..சரியா ? "
" ம்ம்ம் ....நான் வரவா ? "
" எங்க செல்லம் ? "
" அர்ஜுன் போய்டு வரட்டுமான்னு கேட்டேன் "
"சரிடா "
ஒரு புன்னகை வீசி விட்டு துள்ளலோடு நிறைந்த மனதுடன் நடந்து சென்றாள் சுபத்ரா ..
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
அது என்னை சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக
எப்படி என் மனம் இப்படி ஆனதோ
அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்
சுபத்ரா வழிமீது விழி வெச்சு காத்திருந்த வெள்ளிகிழமையும் வந்துவிட்டது...காலேஜ் முடிஞ்சதுமே அர்ஜுனிடம் பேச எண்ணி அவள் செல்போனை தேட, அதே நேரம் அவளது செல்போன் சிணுங்கியது ......
"நேற்று இல்லாத மாற்றம் என்னது" ( இதுதான் நம்ம சுபியோட ரிங்டோன்........ ஆனால் கால் பண்ணது யாரு தெரியுமா ? )
" ஹாய் சுபி ! "
" சொல்லு ஜானு ? "
" அடிபாவி என்னடி கொஞ்சம் கூட உற்சாகமே இல்லாம பேசற .............. இல்ல ஜானு அர்ஜுன் ......ம்ம்ம்ம்.....
(எப்போ பார்த்தாலும் உலரிகொட்டுறதே வேலை எனக்கு என்று சலித்துக்கொண்டு )
இல்ல ஜானு இப்போதான் காலேஜ் முடிஞ்சது ..அதான் ............ "
" அதான் மேடம் மாமா கால்காக வைட் பண்ணவும் நான் குறுக்க வந்துட்டேனோ ............. இன்னைக்கு நீ தலைகீழே நின்னாலும் மாமா கிட்ட பேச முடியாது ....."
" அச்சோ ஏண்டி ? "
(இந்த ஒரு வாரம் மெசேஜ் பண்றேன் பேர்வழின்னு ஜானுவும் சுபியும் டீ போட்டு பேசற அளவுக்கு க்ளோஸ் ஆகிட்டாங்க ...அர்ஜுன்தான் பாவம்)
" ரிலாக்ஸ் சுபி ...எப்பா நீ இப்படி குதிப்பேனு தெரிஞ்சுதான் மாமா என்கிட்ட மறக்காம சொல்லிடுன்னு அடிக்கடி சொன்னார் போல "
" இப்படி பீடிகை போட்டு பேசின அப்பறம் நான் ராட்சசியா மாறிடுவேன் டீ "
"ஆமா அதையும் சொன்னார் ...நீ அழகான ராட்சசியாமே "
" ..............................."
" சரி டீ கோபப்படாதே.... மாமாவுக்கு மீட்டிங் இருக்காம்...நீயே கால் பண்ணி அவர் எடுக்கலேன்னா உனக்கு கஷ்டமா இருக்குமாம் .. இளவரசி கால் பண்ணி எடுக்கலேன்னா அவருக்கும் கஷ்டமா இருக்குமாம் ..... என்ன ஒரு உருகல்ஸ் "
" ஓ.........." என்றவளின் குரலில் ஜீவனே இல்லை.......
" ஹேய் நீ இப்போ காலேஜ் ல தானே இருக்கே ? "
" ம்ம்ம் ஆமா ஏன் ? "
" கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லிடு "
" என்னடி சொல்லுற ?" அவளுக்கு பதில் சொல்ல ஜானு அங்கே இருந்தா தானே? கடவுளுக்கு நன்றி சொல்ல சொன்னவள் உடனே அழைப்பால் துண்டித்துவிட்டாள்... ஜானுவின் பீடிகையை நொடிபொழுதில் புரிந்துகொண்டவள், எதிரில் இருந்த கோவிலுக்கு ஓடினாள் என்று தான் சொல்ல வேண்டும் .... அங்கே அவளின் அர்ஜுனன் மந்தகாச புன்னகையுடன் நிற்க
" மீட்டிங் பிளேஸ் கோவிலுக்கு ஷிப்ட் பண்ணிட்டாங்களா ? இதென்ன விளையாட்டு ? "
" ஹாஹஹ இது அர்ஜுனின் லீலைகள் அன்பே ..."
போதும் போதும் போதும் ! இப்படியே இவங்க லவ் சீன் படிச்சா ஜானகியோட ஜோடியை எப்படி கண்டுபிடிக்கிறது ? சோ இவங்களை இங்கயே விட்டுடு ஆபீஸ் ல நம்ம கிருஷ்ணாவும் ரகுவும் பேசுறதை கேட்போம் ....
" அண்ணா அப்போ நீங்க சொல்றதை வெச்சு பார்த்தா ? அர்ஜுனன் தான் நம்ம தங்கச்சிக்கு ஏத்த மாப்பிள்ளை... பட் அந்த ஜானகி பொண்ணுதான் கொஞ்சம் புரியாத புதிர் "
" புதிர்னு இல்லடா.... அர்ஜுன்க்கு அத்தை பொண்ணு... இப்போ அவங்க வீட்டுலதான் இருக்கா.... அப்பா அம்மா இல்ல .... அர்ஜுன் மனசுல சுபா...சுபா மனசுல அர்ஜுன் ..... நமக்கு தெரிய வேண்டியது ஜானகி மனசுல யாரு ? அர்ஜுன் அம்மா மனசுல யாரு மருமகளா வர்ருற எண்ணம் ? "
( ம்ம்ம்ம்கும்ம்ம் யாரு மனசுல யாரு அவங்களுக்கு என்ன பேருன்னு நிகழ்ச்சியே நடத்திடலாம் போல ) இப்படிலாம் நினைக்க ரகுவால மட்டும்தானே முடியும் ?
" என்னடா ரகு "
" இல்ல அண்ணா நம்ம அடுத்த ..............( ஆஹா அன்னைக்கே இதைத்தானே கேட்டோம் ) அடுத்து என்ன பண்ணலாம் "
" ஏன்டா அடுத்த கட்ட ப்லான்னே கேக்கலாம் "
" அண்ணா ......."
" சரி ரிலாக்ஸ் .... அடுத்து நோ மோர் ப்ளான் ...ஒன்லி ஆக்க்ஷன்...... நாளைக்கு நாம அர்ஜுன் வீட்டுக்கு போகலாம் "
" அண்ணா ஏன் இந்த அதிரடி முடிவு ? அவங்க கேட்டா என்ன சொல்லுறது ? வீட்டுல பெரியவங்க கிட்ட எதுவும் பேச வேணாமா ? "
" டேய் நாம என்ன கல்யாணமா பேச போறோம் ? .............. வெளிய வெயில் கொளுத்துது குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்கன்னு கேட்போம் "
" அண்ணா இருந்தாலும் இது அடாவடி......"
" அடிதடி ஆகாமல் நான் பார்த்துக்குறேன் சரியா? "