(Reading time: 19 - 38 minutes)

 

சாரி நந்து. நீ அவ்வளவு கேட்டும் என்னால வர முடியாம போயிடுச்சி. நீ வேற அண்ணனை பார்க்கணும் போல இருக்குன்னு சொன்ன, இவன் கிட்ட சொன்னா இவன் உன் கூட போறேன்னு சொல்லிட்டான். பட் உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டைன்னு சொல்லிட்டு, உன் கிட்ட இதைப் பத்தி சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டான். சாரி. அந்த கோபத்தை ஏதாச்சும் காமிக்கணும்ன்னா அதை நேரா இவன் கிட்டவே காமிச்சிடு”

“அம்மா. என்னம்மா இது”

“என்னடா”

“நீங்க எனக்கு அம்மாவா. இல்ல இவளுக்கா”

“அவளுக்கும் தான். இதுல என்ன சந்தேகம்”

“அது சரி. ரெண்டு பேரும் செட் சேர்ந்துட்டீங்க. விடுங்க.”

அதற்குள் பஸ் எடுக்க, நந்து அவளின் கோபத்தை காண்பிக்க முடியாமல், “வரேன் அத்தை” என்பதோடு விடை பெற்றாள்.

அவன் அவளுடன் வருவது அவளுக்கு சந்தோஷம் தான் என்றாலும், அதை மறைத்து வைத்தானே என்று கோபமும் கூட தான்.

எனவே சிலிர்த்துக் கொண்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருந்தாள்.

“பார்த்து” என்று கிண்டல் செய்தான் சந்துரு.

என்ன தான் வெளியே கோபம் போல காட்டிக் கொண்டாலும், உள்ளே ஏதோ நிம்மதியாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் பஸ் ட்ராவலில் என்றும் உறங்காதவள் அன்று சீக்கிரமே உறங்கி விட்டாள்.

முன் கோபமாக சீறிக் கொண்டு தள்ளி அமர்ந்தவள் இப்போது அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்து ரசித்தவாறே தன் தூக்கத்தை தொலைத்தான் சந்துரு.

மணி பண்ணிரண்டு கூட ஆகவில்லை.

நந்து திடீரென்று தூக்கிப் போட்டார் போல அதிர்ந்து விழித்து விட்டாள்.

அவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தவன் “என்னடா என்ன ஆச்சி” என்றான்.

முதலில் பேச்சு வராமல் தவித்தவளை தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தி “இப்ப சொல்லு” என்றான்.

“ஆரு ஏதோ அலறரா” என்றாள்.

“என்னது” என்று திரும்ப கேட்டவனுக்கு அதையே பதிலாக சொன்னாள்.

“ஓ கனவு கண்டியா”

“ம்ம்ம். ஆனா ஏதோ நிஜம் போல இருந்துச்சி. ஆரு ஏதோ கத்தறா. எனக்கு ஏதோ பயமா இருக்கு”

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 17

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 19

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.