" உன்னை பார்த்துகிட்டு வர்றதுதான் என் வேலையா ? "
" ச்ச உன்கிட்ட பேசினேன் பாரு "
" நான் பேச சொன்னேனா ? "
" மித்ரா !!!! "
" ச்சு என்ன நீ சீரியல் வில்லி மாதிரி கத்துகிட்டு ... போ ..போ"
" ச்சி ..போடி " என்று கோபமாய் அங்கிருந்து அகன்றாள் வைஷ்ணவி .. கோபத்தில் கூட அவள் நடை மிடுக்ககத்தன் இருந்தது ..அதை கவனித்த மித்ரா " ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் " என்று பாடினாள்..நல்ல வேலை அது வைஷ்ணவியின் காதில் விழவில்லை ..
குளியலறைக்குள் சென்ற மித்ரா , வைஷ்ணவியை போல, இடதும் வலதும் திரும்பி தோரணை காட்டிவிட்டு " ஹ்ம்ம் அவ இடுப்புக்கு மட்டும் வாய் இருந்தா என்னை விடுடீ நு அழுதிருக்கும் .. சரியான சீன் காரி .. ( வைஷ்ணவியைதான் ) ............... நீ அதை எல்லாம் கண்டுகாத செல்லம் .. நம்மலாம் நஷ்ரியா மாதிரி இல்லாமல் ஸ்னேஹா மாதிரி அடுத்த வீட்டு பொண்ணு லுக் ல இருக்குறதுதான் கெத்து " என்று தன்னை தானே ரசித்து கொண்டாள்..... கூடவே அவள் இன்று தன் தாயிடம் செய்த குறும்புத்தனம் ஞாபகம் வந்தது ...
" ஒவ்வொரு வெள்ளிகிழமையும் லீவ் போடுறேன்னு கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்காங்களே இந்த மம்மி ...ஷக்திகிட்ட பேசுறதுக்குதான்னு தெரிஞ்சிருக்குமோ ??? " என்று யோசித்தாள்...
( ஷக்தி கிட்ட பேசவா ? என்ன நடக்குது ? ஷக்தி - மித்ராவுக்கு என்ன உறவு? அந்த கேள்விக்கு பதில் இப்போவே சொல்லுறேன் ... வாங்க )
ஷக்தியின் தந்தை லக்ஷ்மிநாராயணனும், மித்ராவின் தாயாரும் உடன் பிறப்புகள் .. அதே போல ஷக்தியின் தாய் திவ்யலக்ஷ்மியும் மித்ராவின் தந்தை தேவசிவனும் அண்ணன் தங்கையாவர்.... இரு குடும்பங்களுமே தங்கள் இளம் பிராயத்திலிருந்து இப்போது வரை இணைபிரியாது ஒற்றுமையாய் இருக்கின்றனர் .. நம்ம சக்தியின் எதிர்வீட்டில்தான் நம்ம சங்கமித்ராவும் இருக்காங்க ... இப்போ புரியுதா மித்ராவுக்கு ஷக்தியை எப்படி இவ்வளவு நல்ல தெரியும்னு ???
" அம்மா காபி ரெடியா ? "
" ஏன் உன் ஷக்தி மாமா துபாய் போனதிலிருந்தே மேடம் டீ குடிக்கறதில்லை??? " என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் சித்ரா .. அவர் கேட்ட விதத்தில் மித்ராவின் முகத்திலும் மின்னலாய் புன்னகை தோன்றியது .
அது என்ன கதைன்னா, நம்ம ஷக்தி வீட்டில் அனைவருமே காபி பிரியர்கள் அவனைத்தவிர .. அதனால் தினம் காலையில் சித்ரா தரும் டீயை சக்தியும் லக்ஷ்மி அத்தை போட்ட காப்பியை மித்ராவும் மாற்றி குடிப்பது வழக்கம் .. அதை இரு தரப்பு பெற்றோர் அறிந்தாலும்கூட ஒரு புன்னகையுடன் அதை கண்டுக்காமல் விட்டு விடுவர் .. அதை மனதில் குறித்து வைத்துதான் இப்போது கேட்டார் சித்ரா ..
" அதுகென்ன மா ? மாமாவை சீக்கிரம் வர வைக்கிறேன் .. அதுக்கப்பறம் நீங்க டீ போடுங்க .. இருந்தாலும் மருமகனுக்கு டீ போட்டு கொடுக்க அவ்வளவு ஆசை நு சொல்லிட்டு போகலாம்ல? ஏன் என்னை கலாய்க்க ட்ரை பண்றிங்க ? "
" அதுவா? உன் மாமா பேரை சொன்னா நீ அப்படியே வசீகரமா சிரிப்பியா அதை ரசிக்கத்தான் "
" வர வர நீங்க சரியே இல்லம்மா,.. ஆமா சிவா எங்க ? "
" ஹேய் அப்பாவை பேரு சொல்லி கூப்டுறியா ? "
" கூப்பிடத்தானே பேரு சித்ரா ? "
" நீ உதை வாங்க போற ! உன் அப்பா அக்காவை காலேஜ்ல விட போயிருக்காரு .. "
" ஓஹோ"
" என்ன யோசனை மித்ரா ? "
" ஒண்ணுமில்ல மா.. எனக்கு பசிக்கல .. நான் கொஞ்சம் நேரம் ரூமில் லேப்டாப் யூஸ் பண்ணிட்டு வரேன் "
" பேஸ்புக்கா ? "
" எப்படிம்மா இவ்வளவு ஷார்ப்பா இருக்கீங்க ? "
" ஹான் ... கழுதை கேட்ட குட்டி சுவருதானே ?? "
" ஓஹோ ..இருங்க சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லுறேன் "என்று சிட்டாய் பறந்தாள் மித்ரா .. அவள் யாரிடம் பேச போகிறாள் என்பது அவளின் தாயாருக்கும் தெரியாமல் இல்லை .. சொல்லபோனால் அதனால்தான் அவளை அவர் தடுக்கவும் இல்லை .. பேஸ்புக் வந்தவள் ஷக்தியின் பெயர் அருகில் பச்சை நிறம் தெரியவும் " ஆஹா நம்ம மணி ரத்னம் படம் ஹீரோ தூங்கலை போல " என்று உற்சாகமாகி அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்... ( ஒரு குட்டி உரையாடலை உங்களுக்கு காட்ட விரும்புவதால், அவர்கள் பேசியதை ஆங்கில எழுத்தில் கொடுத்திருக்கிறேன் )
Mithraa DevaShivan : Haiiiiiiiiiiiiiiii :D
Shakthi Smart : ……..
Mithraa DevaShivan : deiiii are you there ?
Shakthi Smart : no
Mithraa DevaShivan : aarambichchuddiyaa ?
Shakthi Smart : (y)
Mithraa DevaShivan : epdi irukka shakthi ?
Shakthi Smart : gud d…
Mithraa DevaShivan : donkey
Shakthi Smart : haha ..y?
Mithraa DevaShivan : naan eppadi irukkennu kedka maaddiyaa ?
Shakthi Smart : sollu
Mithraa DevaShivan : enna solla ? onnum venam po
Shakthi Smart : J
Mithraa DevaShivan : nee ippo adithaan vaanga pora ..
Shakthi Smart : Sari sari .. How is Vaishnavi :P
Mithraa DevaShivan : Bye
Shakthi Smart : ennachchu ?
Mithraa DevaShivan : ………………….
Shakthi Smart : oi…ennadi aachchu ?
Mithraa DevaShivan : Un kidda vazhiya vanthu pesura ennai paththi visaarikkamal avalai paththi kekura nee?
Shakthi Smart : mithu
Mithraa DevaShivan : onnum venam po
Shakthi Smart : pch .. ellam therinju nee ipadi kobapadalamaa ?
Mithraa DevaShivan : therinjathunaalathan kedkuren … nee engalai vidudu anga irukkurathukku kaaraname ava than .. avalai kandaale kobam kobamaa varuthu ..aana nee maddum innum avalaiye nenachukiddu iruu .. sari ninaikirathuthaan ninaicha .. ennai oru vaarththai eppadi irukkennu keddiyaa ? disappointed da .. unakku eppavume avathaane mukkiyam .. naan ellam un kannulaye theriyamaaddene …..
Shakthi Smart : hey ammu
Mithraa DevaShivan : mmmm …..
Shakthi Smart : no kovam … siri
Mithraa DevaShivan : mudiyaathu
Shakthi Smart : appo po naan innaiku unaku call panalam nenachen.. pannala vidu
Mithraa DevaShivan : hey :D : D: D nijamaava shakthi ?????
Shakthi Smart : yes !
(அதன் பிறகு ஷக்தியும் மித்ராவும் என்ன பேசுனாங்க ? ஷக்தி துபாய் போனதுக்கும் வைஷ்ணவிக்கும் என்ன சம்பந்தம் ? இதை அடுத்த எபிசொட் ல சொல்றேன் . )