(Reading time: 24 - 47 minutes)

 

 " தான்னே பார்த்தேன் என்னடா நம்ம குரங்குக்குட்டி இவ்வளவு நேரம்  அமைதியா இருக்காளேன்னு " என்று  சமயம் பார்த்து அவளை வாரினாள்  சுபத்ரா ..

" அடியே நானும்  பார்க்குறேன் அதென்ன உனக்கும் உன் ஹீரோவுக்கும் நான் பார்க்க குரங்கு மாதிரி தெரியுறேனா? கார்த்தி கிட்ட சொன்னா என்னாகும் தெரியும்ல ? "

சுப்ரியாவோ " என்னாகும் என் தம்பி என்ன பண்ணி இருப்பாரு தெரியுமா ?  சரியாத்தான் சுபா சொன்னான்னு சொல்லி ஹை  5 கொடுத்திருப்பான் " என்றாள் ..

" அண்ணி யூ  டூ ?"

" எஸ் பேபி "

" ஹ்ம்ம் இதுக்கெல்லாம் சேர்த்து நான் ஆகாஷை பழி வாங்குறேன் இருங்க" என்று மிரட்டினாள்  இளையவள் ...

"  சரி சரி நித்யா என் மருமகளை பத்திரமா பார்த்துக்கோ ....வாங்கம்மா  நாம கிளம்பலாம் " என்ற  லக்ஷ்மி அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார் ...

" வாங்க எல்லாரும் ஒரு குளியலை போடலாம் ..... " என்று சுபா உற்சாகமாய் நடக்க அனைவரும் பின்தொடர்ந்தனர் ...

அழகிய பெண்களை கண்ட ஆர்வத்திலோ  என்னவோ பம்ப் செட்டில் இருந்து நீர் தறிகெட்டு தாவி அனைவரையும் நனைத்தது ... ஒருவரை ஒரு கை பிடித்து இழுத்து நீரில் நனைந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர் .,... அப்போதுதான் ப்ரியா கவனித்துவிட்டு,

" ஆமா எங்கடி மது ?? " என்றாள் ...

" அட என் ப்ரீ செல்லமே .. உனக்கு மட்டும்தாண்டி  நான் மனசுலேயே நிற்குறேன்  போல .. அதுக்காகவே உனக்கு ஸ்பெஷல் உம்மா இந்தா .. " என்றவள் காற்றில் முத்தத்தை பறக்க விட்டாள் ...புவனாவோ

" ஐயோ மது என்ன இது ? " என்றலறினாள் ...

" என்னவா இது உம்மா புவனா ..உனக்கும்  வேணுமா ? " இந்தா  என்று சொல்லி மீண்டும் காற்றில் முத்தத்தை பறக்கவிட்டாள் ...

" ஹே இறங்கி வாடி லூசு " - கீர்த்தனா

" கீர்த்ஸ் .. ஜாலிய இருக்கு நீயும் வா " என்று அவளையும் துணைக்கு அழைத்த மது எங்க இருந்தா தெரியுமா ? அங்கு அருகில் இருந்த ஆளுரையதிற்கும் கொஞ்சம் தாழ்வான  நீர்த்தொட்டி மீது நின்று கொண்டிருந்தாள்... அந்த இடம் எப்படி இருக்குனு சொல்லனும்னா, நம்ம சின்னத்தம்பி படத்துல குஷ்பூவை பிரபு சார் ஊரு சுத்தி பார்க்க கூட்டி போவாங்களே .. அப்போ கூட " போவோமா ஊர்கோலம்னு " டுயட் பாடுவாங்க .. ஆமா அதே தான் ... அந்த பாட்டுல " கொட்டுகிற அருவியும் மெட்டு கட்டும் குருவியும் அடடடா அதிசயம் " நு குஷ்பூ சொல்லிகிட்டே நீந்துவாங்களே  ..எஸ் எஸ் ஆதே மாதிரி இருந்தது அந்த தொட்டி .. அதன் மேல நின்னுகிட்டுதான் நம்ம மது நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தாள்...

ஜானுவும்  " ப்ளீஸ் மது ... எனக்கு பார்க்கவே பயம்மா இருக்கு .. வழுக்கி விழுந்துட போற.. உள்ளே விழுந்தா பரவாயில்ல .. வெளில பாரு எவ்ளோ கல்லு ... அடி பட்டுடும் டா " என்றாள் ..

" அச்சோ என்ன ஜானு ?? இது எனக்கு தெரியாதா ? இருந்தாலும் நான் ஸ்டெடி ஆ தானே நிற்குறேன் .. இதெல்லாம் ஒரு த்ரில் .... ஏன் மிஸ் பண்ணுறிங்க ..ப்ளீஸ் வாங்க எல்லாரும்"  என்றாள்  ..

அவளது ஆசை பேச்சில்  முதலில் மயங்கியது நம்ம பஞ்ச பாண்டவர் டீம் தான் .. அவளின்  பேச்சை கேட்டு அவள் கையை பிடித்துக் கொண்டு ஒவ்வொருத்தராய் ஏறினர் .. நிஜமாகவே அந்த லேசான காற்றுக்கும், பச்சை பசேலென்று இருந்த அந்த சுற்றுப்புறத்திற்கும்  அவர்கள் நிற்கும் உயர்திற்கும்  ஒரு புதுவித அனுபவமாகத்தான் இருந்தது .. எல்லாம் நல்லத்தான் போய்கிட்டு இருந்தது .. ஆனா நம்ம மது, நித்யா , சுபத்ரா போன்ற பிரதான வாலுங்க  இருக்கும்போது கலகலப்போடு சேர்ந்து கொஞ்சம் கைகலப்பு ஆகலன்னா வரலாறு என்ன பேசும் ? அந்த கவலை மதுவிற்கு  வந்ததுவிட்டது போல ... அவள் கையை பற்றிக்கொண்டு அனைவரும் ஏறியதால், இருபுறமும் தன் தோழிகள் இருக்க, அவர்களுக்கு நடுவில் மது இருந்தாள்  .. என்னத்தான் பேச்சு பேச்சாக இருந்தாலும் , எங்கே  விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அனைவரும் ஒருவரின் ஒருவர் கையை  இருக்கமாய் பிடித்து கொண்டு நிற்பதை கவனித்தவள், கண்ணிமைக்கும் நேரத்தில் பற்றிய  கையை விடாமல் அப்படியே அந்த நீர்த்தொட்டிக்குள் குத்திதாள் .. அவள் குதித்த வேகத்திலும் , கை பிடித்து நின்றதின் விளைவாலும் மற்ற பெண்களும் " பொத்தென " உள்ளே குதித்தனர் .... இப்போ புரியுதா ஏன் இந்த கொலைவெறின்னு ??

" அம்மா தாயே .. செல்லங்கள... தெய்வங்களே ...விடுங்கடா ... மது பாவம்ல " என்று பாவமாய் வெள்ளைக்கொடி காட்டினாள்  மது ..

" சரி சரி பொழைச்சு போ " என்றாள்  மித்ரா...

" ஆனா இதுவும் ஜாலியாத்தான் இருக்கு " என்றாள்  மலர் நீந்தியபடியே..

" அடி குரங்கே... இங்க எல்லாரும் என்னை ரவுண்டு கட்டி அடிச்சிங்களே அப்போ இதை சொல்லி என்னை காப்பாத்தனும்னு  தோணிச்சா உனக்கு ? " என்றபடி மலரின் முகத்தில் நீரை தெளித்து விளையாடினாள்  மது .. இப்படியாய்  ஒருவரை ஒருவர் சீண்டுக் கொண்டே இருந்தனர் ..

 நித்யாவோ  " ஹேய்  போதும் விளையாட்டு .. கொஞ்சம் கல்யாண பொண்ணுகளை கவனிப்போமே " என்று அவர்களை சீண்டுவதற்கு அடிபோட்டாள் ... சுப்ரியாவும்

" ஆமா ஆமா ...நானும் பார்க்கிறேன் .. என்னத்தான் பேசி சிரிர்ச்சாலும் மூணு பெரும் அப்படியே கனவுலகத்தில் மிதக்குறாங்க  " என்று  தன் பங்குக்கு ஆரம்பித்தாள் ... மீராவோ

" இருந்தாலும் நீங்க உங்க கல்யாணத்தில் படாத  வெட்கமா அண்ணி  " என்றாள் . இப்படியே நம்ம பொண்ணுங்க ஒருத்தரை ஒருத்தர் வாரிக்கிட்டு இருக்கும்போது, நம்ம ஹீரோ எல்லாரும் என்ன பண்ணுறாங்கன்னு  பார்ப்போம் .....

" என்ன அண்ணா, இந்த தாத்தா அப்பா எல்லாரும் நம்மளை தனியா விட்டுடு போயிட்டாங்க "

" ஹாஹஹா ...நாமெல்லாம் மாப்பிளைகலாம்  அதுனால வேலை எல்லாம் செய்ய கூடாதாம் " - கிருஷ்ணா

" இந்த  பொண்ணுங்களும் பாட்டிகூட போயிட்டாங்க  பாருங்க " என்றான் சஞ்சய்  சோகமாய் ..

" ஏண்டா நாங்களாச்சும் எங்களுடைய ஜோடியை மிஸ் பண்ணி அப்படி சொல்லலாம்.. உனக்கென்ன  வந்தது ? நீ ஏன் பீல் பண்ற? " என்று வேண்டுமென்றே கேட்டான் கிருஷ்ணன் .. அதே கேள்வியுடன்  பார்த்தனர் மற்றவரும் ..

" சகுனி ... பத்த வைக்கிறியா ? "

 " அப்போ பத்த வைக்க ஏதோ இருக்கு தானே அண்ணா " - ரகு

" ரகு நீயுமா ?? "

" கார்த்தி, அந்த புவனா பொண்ணுக்கு உன் சொந்தத்துல ஒரு பையனை பேசலாம்னு சொன்னியே அவன் பேரென்ன ? " என்றான் அர்ஜுனன் சஞ்சயை பார்த்துக் கொண்டே.. அவ்வளவுதான்

" ஐயோ பாஸ் .. உணர்ச்சி வசபட்டு  என் வாழ்க்கையிலே எரிய வேண்டிய விளக்கை வேறொருத்தர் வாழ்க்கைக்கு  அனுப்பி வைச்சிராதிங்க " என்றான் ..

" இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல சஞ்சய் " என்று ஆகாஷும்  வார, ஷக்திதான் 

" சரி விடுங்க பாஸ் .... பாவம் சஞ்சய் அழுதுறுவான் போல " என்றான் ..

" அதானே ஒரு லவ் பண்றவன் மனசு இன்னொரு லவ் பன்றவனுக்குதானே "  என்று புது பழமொழியை சொல்லி ஷக்தியை  திருதிருவென விழிக்க வைத்தான் அர்ஜுனன் .. அவனின் லீலைகள் அறிந்த கிருஷ்ணனோ

" ரிலாக்ஸ் ஷக்தி .. நம்ம டீம் ல டேஞ்சரஸ் மேன்  அர்ஜுன்தான் ... அவன் கண்ணுல எதுவுமே தப்பாமல் இருக்காது " என்றான் ....

" மச்சான் போதும்டா... நீ இப்போவே என்னை வெட்கப்பட வைச்சுட்டேனா அப்பறம் கல்யாணத்துக்கு நான் என்ன பண்ணுவேன் சொல்லு " -அர்ஜுன்

" இதுவும் பொயின்ட்  தான் அண்ணா .. பாவம் நம்ம சுபாவுக்கு வேற வெட்கம் வருமா தெரியல .. அட்லீஸ்ட் அர்ஜுனாச்சும் அதை மெயிண்டயின் பண்ணிக்கட்டுமே "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.