(Reading time: 19 - 38 minutes)

 

ருத்துவமனை.

எல்லாம் சுகம்.

அபிஷேக்கிற்கு இன்னும் தேவை ஓய்வு மாட்டுமே என்ற நிலை.

அண்ணன் தன் தம்பி அபிஷேக்கிடம்  ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டானாகில் சிற்றப்பனோ தகப்பனாய் அண்ணன் மகனை கவனித்தான். குற்ற உணர்ச்சியும் தவிப்பும் சிறுது காணபட்டாலும் மொத்த குடும்பத்திலும் சமாதான அலை. இளம் தென்றலாய் சந்தோஷ காற்றுமே.

சகோதரர்கள் ஒருமித்து வாசம் செய்வதில் ஜீவன் இருக்கிறது. ஆனந்தமும் ஆசீர்வாதமும் அங்கு அடைக்கலபடுகிறது.

தனி மகளாய் வளர்ந்த தயனிக்குமே இத்தனை உறவுகள் காண இனிமை ப்ராவகம். அபியின் காயம் மட்டுமே உள்ளே வலிக்கு காரணம். அதுக்கு காரணம் தானோ என்ற குற்ற குறுப்பு ஒரு ஓரம்.

ன்னாச்சு...?”

அபிஷேக்கும் மஹிபனும் தத்தம் பத்தினிகளுடன் நால்வராக இருக்கும் தருணத்தில் பேச்சை தொடங்கியது தயனிதான்.

“எல்லாத்துக்கும் காரணம் நான்தானா?”

மனவலியை முகம் சுமக்க கேட்டாள். ஆறுதலாய் அவள் தோளை சுற்றியது அவள் கணவனின் காயம் படாத கை.

“அதெல்லாம் என்ன...?” தயனி சுகந்தினி முகம் பார்க்க அபிஷேக்கும் அக்கேள்வி தாங்கிய பார்வையை கண்களில் ஏந்தி  தனக்காக தன்னை தேடி ஓடி வந்தவர்களை நோக்கினான்.

சுகந்தினி விளக்கினாள்.

“நாலு வகை ஆவிகள் பைபிள்ல வெளிபடுத்தபட்டுறுக்குது.

கடவுள் ஆவியானவர். பரிசுத்த ஆவியான அவர் ஒருவர் மாத்திரமே முதல் வகை.

அடுத்து அவரது படைப்பான தேவதூதரகள். அவர்கள் ஒருவகை ஊழிய கார ஆவிகள். கடவுளுக்கு மாத்திரம் கீழ்படிவார்கள். கர்த்தரின் வார்த்தைக்குட்பட்டு மனிதனுக்கு நன்மை செய்யவும் அவனை தண்டித்து சரி வழிபடுத்தவும் வல்லமை பெற்றவர்கள். தெய்வ கட்டளையின் நிமித்தம் தங்களை தாங்கள் வெளிப்படுத்திக் கொண்டால் மட்டுமே இவர்களை மனிதன் காண முடியும். பார்வையில் படாவிட்டாலும் நம்மை சுற்றி பல வேலைகளில் இவர்களது கரங்கள்.

அடுத்து மனித இனம். தசை உடலில் வாழும் ஆவிகள் இவர்களுடையது. தேவ தூதர்களைவிட கடவுளிடம் இவர்களுக்கு சலுகை செல்லம் அதிகம். காரணம் இவர்கள் கடவுளின் பிள்ளைகளாய் படைக்கபட்டவர்கள்.   உடல் இறந்ததும் இவர்களது ஆவி கடவுளின் மொத்த கட்டுப்பாடில் சென்றுவிடுகிறது.  பூமியில் அவர்கள் மரணத்திற்கு பின் இப்பொழுது உலாவ வழியில்லை.

நாலாம் வகை என்பது தீயவை. இவர்கள் தீயவைகளாய் படைக்கபடவில்லை. ஊழியக் கார ஆவிகளாக, நல்லவர்களாக  உண்டாக்கபட்டவர்கள் தான். ஆனாலும் பாவம் செய்து கடவுளை அவரது அருகாமையை இழந்து விலகி சாத்தானகிப் போன ஊழியக்கார ஆவியான லூசிஃபரின் பின் போனவர்கள். தன் நிலையிலிருந்து விழுந்து போனவர்கள். உலகில் பாவம் துன்பம் நுழைய மூலகாரணம் இவர்களே.

டவுள் வாழும் இடத்தில் இவர்களால் வாழ முடியாது. ஆவிக்குரிய அசுத்தம் அதாவது துர்சிந்தனை, கொலை எண்ணம், வேசித்தனம் (திருமணத்திற்கு பின் தவறான உறவுகொள்ளும் ஆண்/ பெண்), திருமணமில்லா பாலுறவு (மனதளவில் கூட), திருட்டு, பொய், புறம் கூறல், பழி உணர்வு, கோபம், வெறுப்பு, கசப்புணர்ச்சி, பெருமை, பொறாமை போன்றவைகைளில், அத்தகைய தொடர் நினைவுகளில், மட்டுமே இவர்கள் பாதம் பொருந்த, வசிக்க வாழ இடமுண்டாகும்.

அப்படி பாவ எண்ணம் கொண்ட  எந்த மனிதன் எல்லைக்குள் இவர்கள் நுழைந்தாலும் அவனை தவறான காரியத்தை செய்ய தூண்டுவார்களே ஒழிய இவர்களாக எதையும் செய்ய சக்தி அற்றவர்கள்.

 தன் எல்லைக்கும் செயலுக்கும் ஒவ்வொரு மனிதனும் தானே ராஜா. ஆதலால் அவனை தடம் மாற, தொடர்ந்து அவர்களின் நினைவுகளை தூண்டுவார்கள். தற்கொலை எண்ணம், டிப்ரஷன், பழி வாங்கும் வெறி, எதன் மீதும் வெறித்தனமாய் ஏற்படும் ஈடுபாடு, மனித இயல்பு மீறிய வக்ர உணர்வுகள் இப்படி பல இவைகளின் செயல்.

பொய்யின் பிறப்பிடமான சாத்தான் இவர்களது தலைவன். ஆக எப்படிபட்ட பொய்யும் இவைகளுக்கு அத்துப்படி.  முன்பு கடவுளின் சட்டத்தை நிறைவேற்றிய பணி செய்தவர்கள் என்பதால் அவரது சட்டமும், கடவுள்  எங்கு எப்படி நடந்து கொள்வார் என்பதையும் நன்கு அறிந்தவர்கள்.

அதனால்  ஒரு மனிதனின்  செயலை வைத்து அவனுக்கு அடுத்து, பரத்திலிருந்து  என்ன உண்டாகும் என்பதை தெளிவாக ஊகிக்க தெரியும் இவர்களுக்கு. ஆதாலால் தங்கள் ஊகத்தோடு பொய்யும் கலந்து உண்மையும் பொய்யுமாக மனிதனிடம் சொல்லி நம்ப செய்து ஏமாற்றுவதில் இவை வல்லவர்கள். அதோடு எந்த தவறான பாவ காரியத்தையும் அழகாய், பார்வைக்கும் மனித மனதிற்கும் ஏற்றதாய் திரித்துக் காண்பிப்பதில் சூத்திரதாரிகள். ஃஸ்ட்ராங்க் டெம்ப்டெர்ஸ்.

அதற்கு அந்த மனிதன் கீழ்படிய தொடங்கும் போது தீவினைகள் உண்டாகும். பாவம் பெருகும்.இவைகளுக்கு வாழ்விடம் உண்டாகும். மேலும் இறைவன் மிகவும் நேசிக்கும அவரது பிள்ளைகளான மனித இனம் இறைவனை இழக்கும். இதுதான் இவர்களது தேவை.

ங்க விஷயத்தில் உங்களோட அத்தை மேல உங்களுக்கு இருந்த வெறுப்பு இவர்களுக்கு நுழை  வாசல்.

எல்லா மனிதர்களுக்கும் இந்த ஆவிக்குரிய போராட்டம் இருந்தாலும் அது பெரும்பாலும் தீய நினைவுகளாக மட்டுமே உணர படும் படியா இருக்குது.

 இவை வெகு சிலரை அவங்க மனதுக்கு பிடிச்சவங்க உருவத்தில, எந்த உருவத்தில வந்தா அவங்க நம்புவாங்களோ அந்த உருவத்தில வந்து ஏமாத்த முயற்சி செய்யுது.

அந்த வகையில் உங்களுக்கு இப்படி உங்களுக்கு வேண்டியவங்களாகவும், உங்கள் எதிரி மாதிரியுமா ரெண்டு வகையா வந்து உங்க கையாலையே உங்க குழந்தைய கொல்ல, உங்கள தற்கொலை செய்ய வைக்க தூண்டி இருக்குது.

“அபி இறந்தா கூட நல்லதுன்னு...நினைக்க வச்சுட்டு....”  வலியுடன் அறிவித்தாள் தயனி.

ஆறுதலாய் அவளை வருடியது அபிஷேக்கின் கை.

அபிஷேக் வீட்டு முன்னோர்கள் செய்த தவறான காரியம் இந்த மாதிரி ப்ரச்சனை அபிஷேக்கின் எல்லைக்குள் வர மற்றொரு வாசல்.

ஆனா அவர் அதை அடைச்சுட்டதால ஏற்ற நேரத்தில உதவியும் உங்களுக்கு கிடச்சிட்டு.

அந்த அசுத்த ஆவிகள் தான் அந்த கொள்ளையர்களை கொலை செய்ய தூண்டியதும் அபிஷேக்கின் அண்ணாவை உதவாமல் அவர் மனதை கலைத்ததும்.

அபிஷேக் ஏமாறுவதாக நினைத்து சேந்தன், அபிஷேக் சித்தப்பா குடும்பத்தினர் மீது அபிஷேக் அனுமதியின்றி வழக்கு தொடரவும், வழக்கு  செய்தி கிடைத்த அபிஷேக் அண்ணன் இத்தனை நாள் கழித்தும் தங்களை தேடி வந்து அபிஷேக் இவர்களுக்கு துன்பம் செய்வதாக நினைத்து வெறுப்பு கொண்டார்.

அந்த வெறுப்பே இந்த ஆவிகளுக்கு அவர் மீதும் இடம் உண்டாக்கி தந்து, ஆபத்தில் அபிஷேக் குடும்பத்திற்கு உதவமால் அவரை மனதளவில் தடுக்க வழி செய்தது.

துர்சிந்த்னைகள்ல சாத்தான் வாழ்றாங்கிற மாதிரி துதிகளில் பரிசுத்த ஆவியான கர்த்தர் இறங்குவார். அப்பொழுது அங்கு விடுதலை உண்டாகும். ஆனாலும் மனம் திரும்பாவிட்டால் நிரந்தர விடுதலை கிடையாது. அதுக்கு பல காரணம்.

அதனால நானும் மஹியும் கர்த்தரை துதித்துக் கொண்டு வந்தோம். பரிசுத்த ஆவியாக கர்த்தர் இறங்கவும் விடுதலை ஆரம்பம். நீங்க மனம் திரும்ப வல்லமை கிடைத்ததும் அவராலதான். பாவ மன்னிப்புக்கு காரணமான யேசுவின் நாமத்தினால அசுத்த ஆவிகள துரத்த அசுத்த ஆவிகள் விலகி ஓடிட்டு....பாவத்தில் வாழும் அவை அந்த கொள்ளையர்கள் எல்லைக்குள்ள போக அவங்களுக்குள்ள என்ன ப்ரச்சனையோ...ஆக்சிடென்ட்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.