(Reading time: 12 - 23 minutes)

"னா இந்த போட்டோ எப்படி அம்மா கைல கிடச்சிது.இது என்னோட ரூம்ல இருந்தது தான. யாருக்கும் தெரியாம தான வெச்சிருந்தேன்" என்று யோசித்து கொண்டே ஹாலை அடைந்தான்.

"மாம்ஸ் உங்க கிட்ட இந்த போட்டோ எப்படி வந்துச்சு. இதுதான் நான் சொன்ன பொண்ணு"

" டேய் படவா!! இதனை நாளா நீ எங்ககிட்டயே மறைச்சிட்ட போடா. நான் உன் மேல கோவமா இருக்கேன்"

"ஹையோ அப்படி இல்லை.அது வந்து அவ இப்போ தான் காலேஜ் கடைசி வருஷம் படிக்கறா.அதுக்கு அப்புறம் உங்க கிட்ட வந்து சொல்லலாம்ன்னு இருந்தேன். ஆனா இப்போ உங்க கிட்ட இத பத்தி பேச வேண்டிய சூழ்நிலை.அதான் மாம்ஸ்.மத்தபடி ஒன்னும் இல்ல. கண்டிப்பா உங்க கிட்ட சொல்லாம நான் வேற யாருகிட்ட சொல்ல போறேன்".

"என்ன ஆச்சு ஆதி.என்ன பிரச்சனை சொல்லுப்பா" என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் " ஹ்ம்ம் இன்னிக்கு என்னோட வேலை விஷயமா ஒருத்தர மீட் பண்ணிட்டு வரும் போது காபி ஷாப்க்கு போனேன்.அங்க எதைச்சியா  நான் ரிதுவ பார்த்தேன். அவ என்னை பார்கலை.அவங்க அண்ணா கிட்ட ஒரு விஷயம் பேசிட்டு இருந்தா.அவளுக்கு எம்.பி.ஏ கனடா யூனிவெர்சிட்டில படிக்க இடம் கிடைச்சிருக்கு. அத பத்தி இன்னும் அவங்க வீட்ல சொல்லல போல. அவங்க அண்ணா கிட்ட சொல்லி பேச சொல்லுவா போல. அத கேட்டு தான் நான் உங்க கிட்ட பேசி ஒரு முடிவு பண்ணலாம்ன்னு வந்தேன். ஆனா அவ அவளோட கனவுகளை பத்தி சொல்லும் போது அவ்வளவு ஆசையா சொன்ன தெரியுமா"

"டேய் என்னடா நீ இப்படி சொல்லற.இன்னும் ரெண்டு வருஷமா.கண்டிப்பா என்னால ஒதுக்க முடியாதுடா. நான் இப்போவே  உனக்கு வயசு ஆய்டுச்சுன்னு கவலை பட்டுட்டு இருக்கேன்."

"ஹ்ம் எனக்கும் புரியுது மாம்ஸ் .ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க. அவ ரொம்ப ஆர்வமா இருக்கா".

இருவரையும் அமைதியாக பார்த்த சொக்கநாதன் ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க "ஆதி நீ போய் தூங்கு.இத பத்தி நாங்க காலைல சொல்றோம். இப்போவே ரொம்ப லேட் ஆய்டுச்சு"

ஆதியும் அரைமனதாக ஒத்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.

தன் அறைக்கு வந்த மதுவோ தன்னந்தனியே புலம்பி கொண்டு இருந்தாள்.

"சே அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்ட அப்படி சொல்லி  இருப்பான்."

"முதல் தடவ பார்க்கற பொண்ணு கிட்ட எப்படி நடந்துகறதுன்னு தெரியலை".

"நாளைக்கு அவனை சும்மா விட கூடாது.அதியமான் கிட்ட போட்டுதரனும்".

"இதுல அடிக்கடி நக்கலா சிரிப்பு வேற"

மாலையில் எப்போதும்  போல காலேஜ் வாசலில் ஆதிக்காக காத்துக் கொண்டு இருந்தவள் தன் மொபைல் அடிக்கவும் எடுத்து பேசினாள்.

"சொல்லு ஆதி.எங்க இருக்க. நான் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்"

"ஹே மது.சாரிடா நான் கொஞ்சம் வெளிய வேலைய இருக்கேன். நீ ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போடா"

"ச்சே என்னடா இப்போ வந்து சொல்ற. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா நான் கவி கூடவே அவ வண்டில போய் இருப்பேன்.போடா உன்னை நம்பினா இப்படி தான் ஆகும். போனை வை"

அதே கோவத்தில் சாலையை பார்த்தவள் தனக்கு அருகில் ஒரு கார் சடாரென வந்து நிற்கவே மேலும் ஆத்திரம் அடைந்தாள்.

அதில் இருந்து இறங்கியவனை கண்டு அவளது இதழ்கள் தானாக  புன்னகையை சிந்தியது.

 "இந்த பனை மரம் எப்படி  இந்த கார்குள்ள உக்காந்துட்டு வண்டி ஓட்டுது" என்று மனதிற்குள் நினைத்தாள்.

அவளின் சிரிப்பை கொண்டு கொண்டவனின் இதழில் தானாக புன்னகை அரும்பியது.

"ஹாய் நீங்க தான மது.ஆதியோட சிஸ்டர்!!"

"ஆமா நீங்க யாரு. இதுக்கு முன்னாடி நான் உங்களை பார்த்தது இல்லையே"

"ஹ்ம்ம் !!உங்க அண்ணாவோட பிரெண்ட்.இப்போதைக்கு இந்த டீடைல் போதும். வாங்க நானே உங்கள டிராப் பண்றேன்"

"ஒஹ் !!சரியான திமிர் பிடிச்சவன் போல" என்று மனதில் கருவி கொண்டான்.

"நான் உங்களை எப்படி நம்பறது. அண்ணாவோட  பிரெண்ட்ன்னு" அவனை முறைத்து கொண்டே கேட்டாள்.

அவளின் முன் எச்சரிக்கையில் அவன் புன்னகை மேலும் விரிந்தது.

"என்னங்க நீங்க. வேண்ணா உங்க அண்ணனுக்கு போன் பண்ணி தரேன்.பேசறிங்களா.நான் ஒன்னும் உங்கள கடிச்சு திங்க மாட்டேன்.என்னை நம்பி நீங்க தாராளமா வரலாம். வாங்க என்று அவளின் கையை பிடித்து முன்சீட்டில் தள்ளினான்"

"ஹே என்ன பண்றீங்க முதல்ல கையை விடுங்க"

"ஹ்ம்ம் ஓகே விடறேன்.இப்போ பேசாம வா. எனக்கு டைம் ஆய்டுச்சு"

அதன் பின் அவன் அமர்த்தும் காரை எடுத்து சாலையில் கவனத்தை பதித்தான்.இருவரிடையும் ஆழ்ந்த மௌனம் நிலவியது.மது லேசாக திரும்பி அவனை பார்த்தாள்.

"என்ன மது!!எனக்கு எவ்ளோ மார்க் போடுவ" என்று உதட்டில் உறைந்த புன்னகையுடன் கேட்டான்.

அவனின் கேள்வியில் திடுக்கிட்டு " ச்சே இவளோ நேரம் இவனையே பார்த்துட்டு இருந்தோம்" என்று வெட்கியவளாய் அவனிடன் "ஒன்னும் இல்ல சும்மா தான் பார்த்தேன்" என்று முனுமுனுத்து விட்டு மறுபுறம் திரும்பி கொண்டாள்.

அதன் பின் வீடு வந்து விடவே அவள் இறங்க தயாரான போது "மது" என்று அவள் கையை பிடித்தான்.

"என்ன" என்று வெடுக்கென கேட்டவள்  "முதல்ல கையை விடுங்க"

ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் அவளின்  கையை விடுவித்து  "ஐ லவ் யு மது" என்று புன்னகையுடன் கூறினான்.

"என்னது!!!" என்று அதிர்ச்சியில் உறைந்தவள் மீண்டும் ஒரு முறை தன் காதில் விழுந்த வார்த்தைகள் சரிதானா என்று குழம்பி

"இ..இப்போ நீங்க எதாவது சொன்னிங்களா"

"ஹ்ம்ம். இப்போவா ஏன் என்ன ஆச்சு.பத்திரமா கொண்டு வந்து  விட்டதுக்கு ஒரு  தேங்க்ஸ்  இல்லையான்னு கேட்டேன்." அவளின் தடுமாற்றத்தை ரசித்து கொண்டே கூறினான்.

"இல்லையே நீங்க வேற ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்"

"அப்படியா.என்ன சொன்னேன் மது.அதை அப்படியே திரும்ப சொல்லு பார்க்கலாம்" என்று கண்களில் விசமமுடன் கேட்டான்.

அவனின் பதிலில் மேலும் ஆத்திரமடைந்து "ஒன்னும் இல்ல. குட் பாய்"

"ஓகே மது!!பாய் திரும்பவும் மீட் பண்ணலாம் டேக் கேர்!!"

அவனின் கார் சென்று ஐந்து நிமிடம் வரை அதே திசையை பார்த்து கொண்டு இருந்தாள்.அதான் பின் வீட்டினுள் நுழைந்து தலை வலிப்பதாக கூறி அவள்அறையில் அடைந்தாள்.இரவு உணவு உண்ணும் போது கூட அதே சிந்தனையில் இருந்தாள்.ஆதியும் அவனின் நினைவுகளில் மூழ்கினான்.மது தனக்கு தூக்கம் வருவதாக கூறிதன் அறைக்கு விரைந்தாள்.

அவன் கூறி சென்ற வார்த்தைகளே மீண்டும் அவள் காதில் ஒலித்து கொண்டே இருந்தது.

"ச்சே அவன் பேரு என்னன்னு கூட தெரியாது.ஆனா அவனுக்கு மட்டும் நம்ம பேரு தெரிஞ்சிருக்கு.நிஜமாவே நம்ம அதியமான்க்கு தெரிஞ்சவனா.இல்லை பொய் சொல்றானா."

"ச்சே மது அந்த மூஞ்சிய பார்த்த பொய் சொல்ற மாதிரி தெரில" அவள் மனம் அவளிடம் கூறியது.

"ஆமா ஆமா.ஆனா அவனை நம்ப கூடாது.ராஸ்கல்"

"ச்சே என்ன மது யாரையோ பத்தி இவ்ளோ நேரம் யோசிச்சிட்டு இருக்கற.பேசாம தூங்க முயற்சி பண்ணலாம்.நாளைக்கு ஆதி கிட்ட இத பத்தி பேசணும்.ஹ்ம் என்னன்னு கேட்கறது அவன் பேரு கூட நமக்கு தெரிலையே" என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

மதுவிடம் தான் காதலை சொன்ன மகிழ்ச்சியில் அவன், அன்று தான் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தான்.

"மதன் அண்ணா அப்பா,அம்மா கிட்ட பேசி இருப்பகளா. கடவுளே இதுக்கு எப்படியாது அவங்க சம்மதிக்கணும்" என்ற நினைவில் ரிதுவும்,

"ஹ்ம்ம் நாளைக்கு இவங்க ரெண்டு பேரும் என்னடா குண்ட  தூக்கி போடா போராங்களோ. அம்மா வேற இதுக்கு மேல தள்ளி போடா முடியாதுன்னு சொல்லறாங்க" என்று ஆதியும்

"ச்சே அவன் பேரு கூட கேட்கலையே .பார்க்க கொஞ்சம் நல்லவன் மாதிரி தான் இருந்தான்.பேர எப்படி கண்டு பிடிக்கறது" என்று மதுவும் அந்த இரவை தூங்கா இரவாக கழித்தனர்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:848}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.