"போடா!"
நண்பர்கள் இருவரும் மேலும் விவாதித்தபடியே ஜீப்பில் ஏறி மதியூர் ஸ்டேஷன் நோக்கி கிளம்பினார்கள்.
மாலையில் ஷாலினியை அழைத்துக் கொண்டு சந்தைக்கு சென்ற சத்யா, அதற்கு முன்பிருந்தே தங்களை தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த அந்த இருவரையும் கவனித்தாள். உயரமாக நல்ல உடல் கட்டுடன் இருந்தவர்களின் முகத்தில் இருந்த வடுக்கள் அவர்களை பயங்கரமாக காட்டியது.
ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசரின் மனைவி என்ற முறையில் செல்லும் இடத்தில் எல்லாம் கவனமாக இருப்பதையும், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதையும் அவள் நன்றாக கற்றுக் கொண்டிருந்தாள்.
அந்த இருவரையும் விழி ஓரத்தில் கண்காணித்தபடி இருந்தாலும், கண்டுக் கொள்ளாதாது போல், காய்கறி கடைக்கு சென்று தான் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
லிட்டாங்க. ஆனால் தேன் இந்த கேசை எடுத்து நடத்த மாட்டேன்னு சொல்லிட்டான்"
"என்னது? அவர் மாட்டேன்னு சொல்லிட்டாரா?"
"ஆமாம் சிஸ்டர். ரொம்ப வெவகாரமான கேஸ் இது. இந்த ஊர், எம்.எல்.ஏ, எம்.பி எல்லார் கிட்டே இருந்தும் ரொம்ப ப்ரெஷர்... அப்புறம் இப்போ பார்த்தீங்கள்ள அது போல மிரட்டல் வேற..."